கேமரூன் எச்சரிக்கை எதிரொலி: போர் சேதாரக் கணக்கெடுப்பு தொடக்கம் - இலங்கை அறிவிப்பு
கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் சிக்கி பலியானவர்களின் விவரம் மற்றும் சொத்துக்களின் சேதாரம் குறித்து இன்று முதல் கணக்கெடுப்பைத் தொடங்க இருப்பதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் இக்கிலாந்துப் பிரதமர் டேவிட் கேமரூன் கலந்து கொண்டார். அப்போது அவர், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்குள்ள தழிழர்களின் நிலை பற்றி நேரில் விசாரணை மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போர் குறித்து சுதந்திரமான, நியாயமான விசாரணை வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதற்காக இலங்கைக்கு அவர் கெடு விதித்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இலங்கை அரசு அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், அங்கு நடைபெற்ற உள்நாட்டுப் போரின் சேதார விவரங்கள் குறித்து இன்று முதல் கணக்கெடுப்பைத் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து மேலும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது....

புகார்....
இதுவரை தமிழர்கள் மற்றும் இலங்கை ராணுவ வீரர்கள் என மொத்தம் 5 ஆயிரம் பேரை காணவில்லை என்று போர் காலத்தின் போது காணாமல் போன நபர்கள் தொடர்பாக விசாரணை நடத்த அரசு அமைத்த 3 நபர் கமிஷனிடம் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது.

28ம் தேதி முதல்....
1983-ம் ஆண்டிலிருந்து மே-2009 வரை ஏற்பட்ட மொத்த உயிர் இழப்புகள்,உடைமை மற்றும் சொத்து இழப்புகள் தொடர்பாக நாளை(28-ம் தேதி) முதல் நாடெங்கிலும் உள்ள 14 ஆயிரம் கிராமங்களில் பொது கணக்கெடுப்பு நடத்தப்படும்.

சேதார விபரம்....
போரின் போது மரணம் அடைந்தவர்கள்,உடல் உறுப்புகளை இழந்தவர்கள்,காயம் அடைந்தவர்கள்,சொத்துகளை இழந்தவர்கள் தொடர்பான் விபரங்கள் இந்த கணக்கெடுப்பின் மூலம் சேகரிக்கப்படும்.

6 மாத கால அவகாசம்....
இந்த கணக்கெடுப்பை நிறைவு செய்ய 6 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது' என இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications