இன மோதல் வெடித்துள்ள இலங்கைக்கு விரைகிறார் ஐநா அதிகாரி ஜெப்ரி பெல்ட்மன்
இன மோதல் நடைபெற்றுள்ள இலங்கைக்கு ஐநா அதிகாரி ஜெப்ரி பெல்ட்மன் விரைகிறார்.
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: முஸ்லிம்களை குறிவைத்து சிங்கள பவுத் பிக்குகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஐநா உதவி செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் அங்கு விரைகிறார்.
இலங்கையில் முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்கள், வர்த்தக நிறுவனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இதனால் இலங்கையில் அவசர நிலை சட்டம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஐநா உதவி செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் நாளை மறுநாள் இலங்கைக்கு வருகை தர உள்ளார். இப்பயணத்தின் போது இலங்கை அதிபர் சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை ஜெப்ரி பெல்ட்மன் சந்திக்க உள்ளார்.
மேலும் வன்முறையால் பாதிக்கப்பட்ட கண்டி மாவட்டத்துக்கும் ஜெப்ரி பெல்ட்மன் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.












Click it and Unblock the Notifications