தனிநாடு கோரிக்கையை கைவிடுகிறது இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!!
கொழும்பு: பிரிக்கப்படாத இலங்கையை ஏற்றுக் கொள்வதாகவும் தனிநாடு கோரிக்கையை கைவிடுவதாகவும் இலங்கை உச்சநீதிமன்றத்தில் உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்ய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
இலங்கை உச்சநீதிமன்றத்தில் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்யக் கோரி சிங்கள பேரினவாதிகள் வழக்கு தொடர்ந்தனர். அதாவது வடக்கு மாகாண சபை தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், தனி நாடு பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், இந்த தேர்தல் அறிக்கையையும், தேர்தல் முடிவையும் ரத்துச் செய்யுமாறு கோரி 5 சிங்கள பேரினவாத அமைப்புகள் சார்பில் 7 மனுக்கள் இலங்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
மேலும் இலங்கையில் தனி நாட்டை உருவாக்கும் நோக்கத்தில்தான் தமிழரசுக் கட்சி செயல்படுவதாகவும் அம்மனுக்களில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இம்மனு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி மொஹான் பீரிஸ் மற்றும் நீதிபதிகள் ரோஹினி மாரசிங்க, பிரியந்த ஜயவர்த்தன ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தேர்தல் அறிக்கையில் பிரிவினைவாத கருத்துகளை தெரிவிக்கவில்லை என்று உறுதிமொழி அறிக்கையை தாக்கல் செய்தால் வழக்கை முடித்துக் கொள்ளலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வழக்கறிஞர் கனகஈஸ்வரனிடம் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனை ஏற்றுக் கொண்டு உறுதி மொழி பத்திரம் தாக்கல் செய்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வழக்கறிஞர் கனக ஈஸ்வரனும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து வழக்கின் விசாரணை வரும் 28-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications