தொடர்ந்து தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டதால் விரக்தி.. ஹோட்டலுக்கு தீ வைத்த பெண்.. எங்கே தெரியுமா?
சிட்னி: கொரோனா முதல் அலையை மிக எளிதாக சமாளித்த ஆஸ்திரேலியா, டெல்டா வைரஸ் மாறுபாடு காரணமாக கொரோனா இரண்டாவது அலையை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் கணிசமாக இருந்தாலும், நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள சிட்னியில் பாதிப்பு அதிகமாக தொடர்ந்து இருந்து வருகிறது.
இது போதாதென்று தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் ஓமிக்ரான் ஆஸ்திரேலியாவிலும் பரவியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தென்னாப்பிரிக்காவிலிருந்து சிட்னிக்கு வந்த இரண்டு பயணிகளிடம் ஓமிக்ரான் வைரஸ் தாக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஓமிக்ரான் வைரஸ்
இதுவரை ஆஸ்திரேலியாவில் மொத்தம் 3 பேரிடம் ஓமிக்ரான் வைரஸ் கண்டறிப்பட்டுள்ளது. இவர்கள் 3 பேரும் முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள். அவர்களிடம் எந்த அறிகுறியும் காணப்படவில்லை. கொரோனா வைரஸ் காரணமாக ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. தற்போது ஓமிக்ரான் காரணமாக கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன.

பெண் செய்த செயல்
ஓமிக்ரான் மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட 9 நாடுகளில் இருந்து ஐந்து விமானங்களில் 141 பயணிகள் வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் தொடர்ந்து தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டு இருந்ததால் விரக்தி அடைந்த பெண் ஒருவர் ஹோட்டலை தீ வைத்து எரித்த சம்பவம் நடந்துள்ளது.

தனிமையில் வைக்கப்பட்டு இருந்ததால் ஆத்திரம்
குயின்ஸ்லாந்த் மாகாணத்தில் வடகிழக்கு நகரமான கெய்ர்ன்ஸில் உள்ள 11 மாடி ஹோட்டலில் 31 வயது பெண்ணும், அவருடைய இரண்டு குழந்தைகளும் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்படுத்துதலில் வைக்கப்பட்டனர். தொடர்ந்து அதிக தனிமையில் வைக்கப்பட்டு இருந்ததால் ஆத்திரம் அடைந்த அவர் ஹோட்டலுக்கு தீ வைத்தார்.

பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்
இதனால் ஹோட்டலில் இருந்த 160-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். நல்ல வேளையாக யாருக்கும் பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. இது தொடர்பாக நிருபர்களிடம் பேசிய அதிகாரிகள், ' அந்த பெண்ணை ஹோட்டலுக்குள் கட்டாயமாக இரண்டு வார தனிமைப்படுத்தலில் இருக்க சொன்ன நிலையில் வெறும் 2 நாட்களில் அவர் ஹோட்டலுக்கு தீ வைத்துள்ளார். ஹோட்டல் ஊழியர்களுக்கு அவர் தொடர்ந்து பிரச்சினைகளை ஏற்படுத்தினார்' என்று கூறியுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications