ஆஸ்திரேலியாவில்.. 12 முதல் 15 வயது குழந்தைகளுக்கு.. ஃபைசர் தடுப்பூசி செலுத்த அனுமதி.. முழு விவரம்!
சிட்னி: ஆஸ்திரேலியாவில் 12 முதல் 15 வயது குழந்தைகளுக்கு ஃபைசர் தடுப்பூசி செலுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன் உறுதி அளித்துள்ளார்.
உலக நாடுகளை தொடர்ந்து ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வர தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் அனைத்து நாடுகளும் மும்முரமாக தடுப்பூசி செலுத்தும் பணியில் ஆர்வம் காட்டி வருகின்றன.
இந்தியா பல்வேறு நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. மற்ற
நாடுகளை ஒப்பிடும்போது ஆஸ்திரேலியா கொரோனா தொற்றை சிறப்பாக கையாண்டுள்ளது. அங்கு இதுவரை 32,400 பாதிப்புகளும், 915 உயிரிழப்புகளும் மட்டுமே எற்பட்டு இருக்கின்றன.

ஆஸ்திரேலியா பின்னடைவு
அதே வேளையில் தடுப்பூசி செலுத்துதில் ஆஸ்திரேலியா பின்னடைவை சந்தித்துள்ளது. மிக மெதுவாகவே தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை 15% க்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மெதுவான தடுப்பூசி திட்டத்திற்கு ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன் வியாழக்கிழமை மன்னிப்பு கேட்டார். 2021-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.

ஃபைசர் தடுப்பூசிக்கு அனுமதி
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் 12 முதல் 15 வயது குழந்தைகளுக்கு ஃபைசர் தடுப்பூசி செலுத்துவதற்கு அந்த நாடு மருந்து கட்டுப்பாட்டு துறை ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது வரை ஆஸ்திரேலியாவில் ஃபைசர் தடுப்பூசி 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே பயன்படுத்தபட்டு வந்த நிலையில் இப்போது குழந்தைகளுக்கும் ஃபைசர் தடுப்பூசி போட ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது.

முன்னுரிமை
தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு முன்பு எந்தக் குழந்தைகளின் குழுக்களுக்கு தடுப்பூசி செலுத்ததில் முன்னுரிமை அளிக்க வேண்டும், எப்போது அதை நிர்வகிக்க வேண்டும்? என்பது குறித்து ஆஸ்திரேலியாவின் தடுப்பூசி குழு ஆலோசனை வழங்கும் என்று அந்த நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் கிரெக் ஹன்ட் இன்று தெரிவித்தார்.

இந்தியாவில் எப்போது?
கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை அதிகமாக பாதிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ள நிலையில் உலக நாடுகள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை காட்டி வருகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் குழந்தைகளுக்கான தடுப்பூசியை அங்கீகரித்துள்ளன. இந்தியாவிலும் விரைவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications