ஆஸ்திரேலியாவில்.. 12 முதல் 15 வயது குழந்தைகளுக்கு.. ஃபைசர் தடுப்பூசி செலுத்த அனுமதி.. முழு விவரம்!
சிட்னி: ஆஸ்திரேலியாவில் 12 முதல் 15 வயது குழந்தைகளுக்கு ஃபைசர் தடுப்பூசி செலுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன் உறுதி அளித்துள்ளார்.
உலக நாடுகளை தொடர்ந்து ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வர தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் அனைத்து நாடுகளும் மும்முரமாக தடுப்பூசி செலுத்தும் பணியில் ஆர்வம் காட்டி வருகின்றன.
இந்தியா பல்வேறு நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. மற்ற
நாடுகளை ஒப்பிடும்போது ஆஸ்திரேலியா கொரோனா தொற்றை சிறப்பாக கையாண்டுள்ளது. அங்கு இதுவரை 32,400 பாதிப்புகளும், 915 உயிரிழப்புகளும் மட்டுமே எற்பட்டு இருக்கின்றன.

ஆஸ்திரேலியா பின்னடைவு
அதே வேளையில் தடுப்பூசி செலுத்துதில் ஆஸ்திரேலியா பின்னடைவை சந்தித்துள்ளது. மிக மெதுவாகவே தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை 15% க்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மெதுவான தடுப்பூசி திட்டத்திற்கு ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன் வியாழக்கிழமை மன்னிப்பு கேட்டார். 2021-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.

ஃபைசர் தடுப்பூசிக்கு அனுமதி
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் 12 முதல் 15 வயது குழந்தைகளுக்கு ஃபைசர் தடுப்பூசி செலுத்துவதற்கு அந்த நாடு மருந்து கட்டுப்பாட்டு துறை ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது வரை ஆஸ்திரேலியாவில் ஃபைசர் தடுப்பூசி 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே பயன்படுத்தபட்டு வந்த நிலையில் இப்போது குழந்தைகளுக்கும் ஃபைசர் தடுப்பூசி போட ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது.

முன்னுரிமை
தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு முன்பு எந்தக் குழந்தைகளின் குழுக்களுக்கு தடுப்பூசி செலுத்ததில் முன்னுரிமை அளிக்க வேண்டும், எப்போது அதை நிர்வகிக்க வேண்டும்? என்பது குறித்து ஆஸ்திரேலியாவின் தடுப்பூசி குழு ஆலோசனை வழங்கும் என்று அந்த நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் கிரெக் ஹன்ட் இன்று தெரிவித்தார்.

இந்தியாவில் எப்போது?
கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை அதிகமாக பாதிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ள நிலையில் உலக நாடுகள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை காட்டி வருகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் குழந்தைகளுக்கான தடுப்பூசியை அங்கீகரித்துள்ளன. இந்தியாவிலும் விரைவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications