"பார்கள்" மூடப்பட்ட கேரளாவுக்கு கடத்தப்பட்ட 10,000 லிட்டர் எரிசாராயம் சிக்கியது....!
செங்கோட்டை: மதுக் கடைகள் கேரளாவில் மூடப்பட்டுள்ள நிலையில் அந்த மாநிலத்திற்கு லாரியில் கடத்தப்பட்ட 10,000 லிட்டர் எரி சாராயம் சிக்கியுள்ளது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழக கேரளா எல்லையான செங்கோட்டை புளியரை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் சரக்கு ஏற்றி செல்கின்றன.
தற்போது அம்மாநிலத்தில் முழு மதுவிலக்கு கொண்டுவர அரசு தீர்மானித்து முதல் கட்டமாக மதுக் கடைகளையும், தனியார் பார்களையும் படிப்படியாக அடைத்து வருகிறது.

தவிப்பில் குடிகாரர்கள்
இதனால் கேரள "குடிமக்கள்" கடும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். மேலும், கேரள மாநிலத்தின் முக்கியப் பண்டிகையான ஓணம் இன்னும் சில நாட்களில் வர உள்ளது. இந்நிலையில் நேற்று பாரதிய ஜனதாக் கட்சி பிரமுகர் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் முழுஅடைப்பு நடைபெற்றது.

லாரியில் கடத்தல்
இதையொட்டி தமிழக கேரளா எல்லையில் ஆயிரக்கணக்காண வாகனங்கள இருமாநில எல்லைகளிலும் நிறுத்தப்பட்டன. இதனை சாதகமாக்கிக் கொண்ட கடத்தல் கும்பல்கள் தமிழக கேரளா எல்லையான புளியரை வழியாக நேற்று நள்ளிரவில் ஒருலாரியில் 10ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை கேரளா நோக்கி கொண்டு சென்றுள்ளனர்.

சிக்கிய லாரி
புளியரை, ஆரியன்காவு சோதனை சாவடிகளை தாண்டி சென்றபோது அம்மாநில சிறப்பு மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையினரின் சோதனையில் எரிசாராயம் கொண்டுசென்ற லாரி சிக்கியது. லாரியையும், அடூரை சார்ந்த ஓட்டுனர், பத்தினம் திட்டாவை சார்ந்த கிளினரையும் கைது செய்து புனலூர் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை செய்துவருகின்றனர்.

ஓணத்திற்காக கடத்தல்
அவர்களிடம் நடத்திய முதல் விசாரணையில் கேரளாவில் மதுக்கடைகள் மூடப்பட்டதால் ஓணம் பண்டிகைக்காக எரிசாராயம் கடத்தி வரப்பட்டதாகவும், இதேபோல இன்னும் நிறைய லாரிகளில் சரக்குகள் வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தீவிர சோதனை
இதையடுத்து ஆரியன்காவு சோதனை சாவடியில் கேரளா மாநில மதுவிலக்கு போலீசார் தீவீர வாகன சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர். 10ஆயிரம் லிட்டர் எரிசாராயம் சந்தை மதிப்பு ரூ 20 லட்சம் ரூபாய் ஆகும்.

ஒரு லிட்டரில் 10 லிட்டர் தண்ணீர் கலந்தால்
ஒரு லிட்டர் எரி சாராயத்தில் பத்து லிட்டர் தண்ணீர் கலந்தால் போதும் அது போதை பானமாகி விடும். தற்போது கேரளாவில் மதுக்கடைகள் மூடப்பட்டு வருவதால் எரி சாராயத்திற்கு அங்கு வழக்கத்தை விட அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications