சீர்காழியில் வாய்க்கால்களை தூர் வாராத அரசு... மழை நீரில் மூழ்கிய 1000 ஏக்கர் நெற்பயிர்கள்

சீர்காழியில் அதிகளவு மழை பெய்துள்ளதால் அங்கு 1000 ஏக்கர் கணக்கில் பயிர்கள் மூழ்கியுள்ளன.

Subscribe to Oneindia Tamil

சீர்காழி: நாகை மாவட்டம் சீர்காழியில் ஒரே நாளில் 31 செமீ மழை பெய்துள்ளதால் அங்கு 1000 ஏக்கர் கணக்கில் பயிர்கள் மூழ்கியுள்ளன. வாய்க்கால்களை தூர் வாராத காரணத்தால் பயிர்கள் நீரில் மூழ்கியதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே நேற்று கனமழை பெய்தது. தமிழகத்தில் சீர்காழியில் 31 செ.மீ. அதிபட்சமான மழை பதிவானது.

1000 acres of crops drown in rain water in Sirkazhi

அங்கு கடந்த 4 ஆண்டுகளாக வறட்சி நிலவி வந்த நிலையில் இந்த மழை மக்களுக்கும், விவசாயிகளுக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. எனினும் அங்குள்ள கால்வாய்களை தூர்வாராததால் நேரடி விதைப்பு செய்யப்பட்ட 1000 ஏக்கர் நிலத்தில் மழைநீர் தேங்கியுள்ளது.

இந்த நீரை வடித்து விட கோரி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் அவர்கள் வரவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். இன்னும் 2 நாள்களுக்குள் இந்த நீர் வடியா விட்டால் பயிர்கள் வீணாகி நஷ்டம் ஏற்படும் என்றும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+