Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தினமும் துயரம்தானா? தமிழ்நாடு மீனவர்கள் மேலும் 14 பேர் கைது- இலங்கை கடற்படை அட்டூழியம் ஓயாதா?

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடித்த மேலும் 14 தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்களை நாள்தோறும் எல்லை தாண்டிவிட்டதாக குற்றம் சாட்டி இலங்கை கடற்படை கைது செய்து வருவது அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 27 மீனவர்களை இலங்கை அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடைபெற்றது.

14 more Tamil Nadu Rameswaram fishermen arrested by Srilankan Navy

இந்த நிலையில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள், 2 படகுகளுடன் மீண்டும் கைது செய்யப்பட்ட அதிர்ச்சி இன்னமும் ஓயவில்லை. இத்தனைக்கும் தலைமன்னார்- ராமேஸ்வரைம் இடையே பாரம்பரிய பகுதியில்தான் தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடித்தனர்.

தற்போது இலங்கைக்குள் எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக மேலும் 2 படகுகளில் இருந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. தமிழ்நாட்டு மீனவர்கள் 14 பேரும் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையின் இந்த அட்டூழியம் தமிழ்நாட்டு மீனவர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+