15 நாட்களுக்கு 144... நெல்லையில்.. கலெக்டர் அதிரடி உத்தரவு!
நெல்லை: பூலித்தேவன் பிறந்த நாள், ஒண்டி வீரன் நினைவு தினம் ஆகியவை அடுத்தடுத்து வருவதால் நெல்லை மாவட்டம் முழுவதும் போலீஸ் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.
இந்த தடை உத்தரவு 15 நாட்களுக்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், சிவகரி தாலுகா நெல்கட்டும்செவல் கிராமத்தில் ஒண்டி வீரன் நினைவு நாள் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது. இதில் பங்கேற்க ஏராளமானோர் வருகின்றனர்.
2011ல் 40 வாகனங்களும், 2012ல் 680 வாகனங்களும் இந்த நிகழ்ச்சிக்காக வந்துள்ளன. வாகனங்களில் வருபவர்கள் உள்ளே இருக்காமல் வெளியே தலையை நீட்டி கொண்டும், மரு அருந்தி கொண்டும் வருகின்றனர். இதனால் மோதல் சம்பவங்கள் நடக்கின்றன. சட்டம் ஓழுங்கும் கேள்வி குறியாகி வருகிறது.
கடந்த ஆண்டு ஒண்டி வீரன் நினைவு நாள், பூலித்தேவன் பிறந்த நாள் நிகழ்ச்சியின் போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஆண்டு நெல்கட்டும்செவல் கிராமத்தில் ஒண்டி வீரன் நினைவு நாள் நிகழ்ச்சியில் 1500 வாகனங்களில் 15 ஆயிரம் பேர் வருவார்கள் என்று தெரிகிறது.
இந்த நிலையில் நிகழ்ச்சி நடக்கும் இடத்திலோ, வாகனங்கள் வரும் போதே அசம்பாதவித சம்பவங்கள் நிகழ்ந்தால் சட்டம் ஓழுங்கு கடுமையாக பாதிக்கப்படும்.
இது போல் செப் 1ம் தேதி பூலித்தேவன் பிறந்த நாள் விழாவுக்கு வருபவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. எனவே நெல்லை மாவட்டத்தில் சட்டம் ஓழுங்கை பாதுகாக்க இன்று 19ம் தேதி காலை 6 மணி முதல் செப் 2ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்த காலங்களில் சுற்றுலா பேரூந்துகள், வெளிமாநில பேருந்துகள், ஆம்னி பஸ்கள் நெல்லை மாவட்டத்துகள் வர தடை விதிக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications