15 நாட்களுக்கு 144... நெல்லையில்.. கலெக்டர் அதிரடி உத்தரவு!
நெல்லை: பூலித்தேவன் பிறந்த நாள், ஒண்டி வீரன் நினைவு தினம் ஆகியவை அடுத்தடுத்து வருவதால் நெல்லை மாவட்டம் முழுவதும் போலீஸ் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.
இந்த தடை உத்தரவு 15 நாட்களுக்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், சிவகரி தாலுகா நெல்கட்டும்செவல் கிராமத்தில் ஒண்டி வீரன் நினைவு நாள் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது. இதில் பங்கேற்க ஏராளமானோர் வருகின்றனர்.
2011ல் 40 வாகனங்களும், 2012ல் 680 வாகனங்களும் இந்த நிகழ்ச்சிக்காக வந்துள்ளன. வாகனங்களில் வருபவர்கள் உள்ளே இருக்காமல் வெளியே தலையை நீட்டி கொண்டும், மரு அருந்தி கொண்டும் வருகின்றனர். இதனால் மோதல் சம்பவங்கள் நடக்கின்றன. சட்டம் ஓழுங்கும் கேள்வி குறியாகி வருகிறது.
கடந்த ஆண்டு ஒண்டி வீரன் நினைவு நாள், பூலித்தேவன் பிறந்த நாள் நிகழ்ச்சியின் போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஆண்டு நெல்கட்டும்செவல் கிராமத்தில் ஒண்டி வீரன் நினைவு நாள் நிகழ்ச்சியில் 1500 வாகனங்களில் 15 ஆயிரம் பேர் வருவார்கள் என்று தெரிகிறது.
இந்த நிலையில் நிகழ்ச்சி நடக்கும் இடத்திலோ, வாகனங்கள் வரும் போதே அசம்பாதவித சம்பவங்கள் நிகழ்ந்தால் சட்டம் ஓழுங்கு கடுமையாக பாதிக்கப்படும்.
இது போல் செப் 1ம் தேதி பூலித்தேவன் பிறந்த நாள் விழாவுக்கு வருபவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. எனவே நெல்லை மாவட்டத்தில் சட்டம் ஓழுங்கை பாதுகாக்க இன்று 19ம் தேதி காலை 6 மணி முதல் செப் 2ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்த காலங்களில் சுற்றுலா பேரூந்துகள், வெளிமாநில பேருந்துகள், ஆம்னி பஸ்கள் நெல்லை மாவட்டத்துகள் வர தடை விதிக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications