கோவில்பட்டியில் இருசக்கர வாகனம் மீது கல்லூரி பேருந்து மோதி விபத்து.. 2 பேர் பலி
கோவில்பட்டியில் இருசக்கர வாகனம் மீது கல்லூரி பேருந்து மோதி விபத்து ஏற்பட்டு இருக்கிறது.
Subscribe to Oneindia Tamil
கோவில்பட்டி: கோவில்பட்டியில் இருசக்கர வாகனம் மீது கல்லூரி பேருந்து மோதி விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இதில் 2 மாணவர்கள் உயிரிழந்து இருக்கிறார்கள்.
திருநெல்வேலி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள பெத்தேல் அருகே இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது. மாலை கல்லூரி விட்டு மாணவர்கள் வரும்போது இந்த சம்பவம் நடந்து இருக்கிறது.

கட்டுப்பாட்டை இழந்து வந்த தனியார் கல்லூரி பேருந்து, எதிரே பைக்கில் வந்த மாணவர்கள் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் 2 மாணவர்கள் சம்பவ சம்பவ இடத்திலேயே உயிரிழந்து இருக்கிறார்கள்.
அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications