கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் கருவி-எம்எல்ஏ அபூபக்கர் திறந்து வைத்தார்
கடையநல்லூரில் 2 டயாலிஸிஸ் மிஷின்கள் திறந்துவைக்கப்பட்டன.
கடையநல்லூர்: சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கரின் தீவிர முயற்சியினால், கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் இரண்டு தொழில் நுட்பங்களுடன் கூடிய ரத்த சுத்திகரிப்பு கருவிகள் நேற்று திறந்து வைக்கப்பட்டன.
கடையநல்லூர் பகுதிகளில் சிறுநீரக நோயாளர்களின் இரத்தம் சுத்திகரிப்பு நிலையம் இல்லாததால் சிறுநீரக நோயாளர்கள் தமது இரத்தத்தை சுத்திகரிப்பதற்காக தென்காசி மற்றும் திருநெல்வேலி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று வந்தனர்.

கடையநல்லூரில் அரசு மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கரின் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் அரசு சுகாதார துறை சார்பில் ரூ.14.40 லட்சம் செலவில் தொழில்நுட்பங்களுடன்கூடிய இரண்டு டயாலிஸிஸ் கருவிகள் வாங்கப்பட்டன. அதனை நோயாளிகளின் பயன்பாட்டுக்கு சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கர் நேற்று திறந்து வைத்தார்
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மாவட்ட சுகாதாரதுறை இணை இயக்குனர் இளங்கோவன், நாள் ஒன்றிற்கு 4 சிறுநீரக நோயாளர்களுக்கு இரத்த சுத்திகரிப்பு நடவடிக்கைகள் இந்த நிலையத்தில் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

இதில் மருத்துவர்கள் தங்கச்சாமி, மீனாட்சி, நகராட்சி ஆணையர் பவுன்ராஜ், பொரியாளர் ரெஜினா மற்றும் முஸ்லிம்லீக் நிர்வாகிகள் நெல்லை மஜீத், செய்து சுலைமான், இக்பால், அப்துல் லத்தீம், உட்பட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications