முல்லைப்பெரியார் அணையில் துணை கண்காணிப்பு குழுவினர் இன்று ஆய்வு....
இடுக்கி : முல்லைப்பெரியார் அணையில் மூவர் குழுவின் பரிந்துரையின்படி துணைகண்காணிப்பு ஐவர் குழுவினர் இன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணையில் கடந்த மாதம் நாதன் தலைமையிலான மூவர் குழு ஆய்வு நடத்தியது. அதனைத் தொடர்ந்து தொடர் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயரத் தொடங்கியது.

இந்நிலையில் மழைக் காலங்களில் மாதம் இரு முறையும் தொடர் மழைக் காலங்களில் வாரம் ஒரு முறையும் ஆய்வு நடத்துமாறு துணைக் கண்காணிப்பு குழுவிற்கு மூவர் குழுவின் தலைவர் நாதன் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதன்படி துணைக் கண்காணிப்பு குழுவினர் முல்லைப் பெரியாறு அணையில் இன்று மீண்டும் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
முன்னதாக கடந்த மாதம் அணையை ஆய்வு செய்த நாதன் தலைமையிலான குழுவினர் நீர்மட்டத்தை உயர்த்த பேபி அணையை வலுப்படுத்துவது அவசியம் என்று தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications