விவேக் வீட்டில் கள்ளத் துப்பாக்கிகள் எதுவும் பறிமுதல் செய்யவில்லை: வருமான வரித்துறை
விவேக் வீட்டு சோதனையில் கள்ளத் துப்பாக்கிகள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என வருமான வரி புலனாய்வு பிரிவு தலைமை இயக்குநர் முரளிகுமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெயா டிவி நிர்வாகியும் இளவரசியின் மகனுமான ஜெயா டிவி விவேக் வீட்டு சோதனையில் கள்ளத் துப்பாக்கிகள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என வருமான வரி புலனாய்வு பிரிவு தலைமை இயக்குநர் முரளிகுமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஜெயா டிவி மற்றும் ஜாஸ் சினிமாஸை நிர்வகித்து வரும் விவேக் வீட்டில் 5 நாட்களாக வருமான வரி சோதனை நடைபெற்றது. இச்சோதனையில் ஏராளமான ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

விவேக் நடத்தி வந்த 50 போலி நிறுவனங்கள் குறித்த ஆவணங்களும் சிக்கின. இவற்றின் மூலமாகவே கருப்புப் பண பரிமாற்றம் நடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
அத்துடன் விவேக்கின் 100-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன. இதையடுத்து விவேக்கை நேற்று வருமான வரித்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று 4 மணிநேரம் கிடுக்குப் பிடி விசாரணை நடத்தி பின்னர் விடுவித்தனர் வருமான வரித்துறை அதிகாரிகள்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விவேக், தமது வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து அதிகாரிகள் கேட்டதாகவும் அதற்கு விளக்கம் அளித்திருக்கிறேன் என்றும் கூறினார். மேலும் திருமணத்தின் போது மனைவிக்கு போடப்பட்ட நகைகள் குறித்தும் அதிகாரிகள் கேட்டதாகவும் விவேக் கூறியிருந்தார்.
இதனிடையே விவேக் வீட்டில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் 3 துப்பாக்கிகளையும் கைப்பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் ஒன்று உரிமம் பெறாத கள்ளத் துப்பாக்கி எனவும் கூறப்பட்டன. ஆனால் வருமான வரி புலனாய்வுப் பிரிவு தலைமை இயக்குநர் முரளிகுமார், விவேக் வீட்டில் இருந்து கள்ளத் துப்பாக்கிகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
-
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications