தமிழகத்தில் புதியதாக 360 அம்மா உணவங்கள் திறக்கப்படும்... ஜெயலலிதா உத்தரவு
சென்னை: தமிழகத்தில் புதியதாக 360 அம்மா உணவகங்கள் திறக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் பயனடையும் வகையில் ‘அம்மா உணவகங்கள்' என்ற பெயரில் மலிவு விலை உணவகங்களை அறிமுகப் படுத்தினார் ஜெயலலிதா. அம்மா உணவகங்களின் வெற்றியின் எதிரொலியாக தமிழகத்தில் மேலும் புதிதாக 360 மலிவு விலை உண்வகங்களை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் கூடுதலாக ஒரு அம்மா உணவகம் செயல்படும். 27 மாவட்ட அரசு பொது மருத்துவமனைகளில் தலா ஒரு அம்மா உணவகம் திறக்கப்படும். திண்டுக்கல், தஞ்சை, கோவை, மதுரை மாநகராட்சிகளில் தலா ஒரு அம்மா உணவகம் திறக்கப்படும். 124 நகராட்சிகளில் 129 உணவகங்கள் விரைவில் திறக்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications