நரேந்திர மோடி பதவியேற்பு விழாவை தமிழகத்தின் 38 எம்.பிக்கள் புறக்கணிக்கின்றனர்?
சென்னை: மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே பங்கேற்பது உறுதி என்பதால் தமிழகத்தில் அதிமுகவிவின் 37 எம்.பிக்கள், பாமகவின் ஒரு எம்.பி என 38 எம்.பிக்களும் அந்த விழாவை புறக்கணிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நரேந்திர மோடி வரும் 26-ந் தேதி டெல்லியில் பிரதமராக பதவியேற்க உள்ளார். அந்த விழாவில் சார்க் நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவும் கலந்து கொள்கிறார்.
ஆனால் இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்சேவை அழைக்கவே கூடாது என்று தமிழக அரசும் தமிழக அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. பாரதிய ஜனதாவின் கூட்டணிக் கட்சியான மதிமுக, பாமக ஆகியவையும் ராஜபக்சேவை அழைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

டெல்லியில் வைகோ முகாம்
இதற்காகவே டெல்லியில் முகாமிட்டுள்ள மதிமுக பொதுச்செயலர் வைகோ, பாஜக தலைவர் ராஜ்நாத்சிங், நரேந்திர மோடி ஆகியோரை நேரில் சந்தித்து தமிழகத்தின் உணர்வை வெளிப்படுத்தியும் வருகிறார். ஆனாலும் பாஜகவினர் கேட்பதாக இல்லை.

தமிழகத்தில் போராட்டங்கள்
தமிழகத்தின் மிகக் கடுமையான எதிர்ப்பை மீறி ராஜபக்சேவை அழைப்பது என்ற பாஜகவின் முடிவுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

புறக்கணிப்பு
ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் மொத்தம் உள்ள 39 எம்.பிக்களில் அதிமுகவைச் சேர்ந்த 37 எம்.பிக்கள் மோடி பதவியேற்பு விழாவை புறக்கணிக்கக் கூடும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜோதியில் கலந்த பா.ம.க.
இந்த ஜோதியில் பா.ம.க.வும் கலந்து கொண்டு மோடி பதவியேற்பை புறக்கணிக்கக் கூடும் என்று தெரிகிறது.

அமைச்சர் பதவி கிடைக்கலையே..
ராஜபக்சே அழைக்கப்படுகிறார் என்பது கடந்த 3 நாட்களாக பேசப்படுகிற செய்தி. ஆனால் பாட்டாளி மக்கள் கட்சியோ கடுமையாக மவுனம் காத்து வந்தது. அதற்குக் காரணம் எப்படியும் மோடி அமைச்சரவையில் இடம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கைதான்.

உறுதி இல்லை..
ஆனால் மோடி அமைச்சரவையில் இடம் கிடைக்காது என்ற நிலையில் இப்போது பா.ம.கவும் ராஜபக்சேவை எதிர்த்து அறிக்கை விட்டிருக்கிறது. இதனால் தமிழகத்தைச் சேர்ந்த 39 எம்.பிக்களில் 38 பேர் பதவியேற்பு விழாவை புறக்கணிக்கக் கூடும் என்றே தெரிகிறது.

பொன்னார் மட்டும் போவார்
தமிழகத்தில் பாஜக சார்பில் வென்ற ஒரு எம்.பி.யான பொன். ராதாகிருஷ்ணன் மட்டும் மோடி பதவியேற்பு விழாவுக்குப் போவார்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications