சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து தப்பிய 6 “ஜெகஜ்ஜால” சிறுவர்கள்….
செங்கல்பட்டு: செங்கல்பட்டு தாலுக்கா அலுவலகம் சாலையில் உள்ள அரசு சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் இருந்து தப்பிய 6 சிறுவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இங்கு பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட திருச்சி, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 34 சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
நேற்று இரவு சாப்பாடு முடிந்ததும் அனைத்து சிறுவர்களும் அவர்களது அறையில் தூங்கச் சென்றனர். நள்ளிரவு 11 மணி அளவில் ஒரு அறையில் இருந்த 6 சிறுவர்கள் ஏற்கனவே பதுக்கி வைத்திருந்த கம்பியால் சுவற்றின் ஜன்னலை உடைத்தனர்.

அதன் வழியாக புகுந்து வெளியே வந்த ஒருவன் அருகில் கிடந்த மர டேபிளை துண்டாக்கி அதன் கட்டையால் அறை பூட்டை உடைத்து உள்ளே இருந்த மேலும் 5 பேரை விடுவித்தான்.
பின்னர் அவர்கள் 6 பேரும் சீர்திருத்த பள்ளியை சுற்றி உள்ள சுமார் 30 அடி உயர சுவரை அருகில் இருந்த மரத்தில் ஏறி குதித்து தப்பிச் சென்று விட்டனர்.
நள்ளிரவில் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அறை ஜன்னலை உடைத்து 6 சிறுவர்கள் தப்பி ஓடி இருப்பது தெரிந்தது. இது குறித்து மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
தப்பி ஓடிய சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியின் பின்புறம் உள்ள கொலவாய் ஏரி வழியாக நீந்தி சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அருகில் பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளதால் இரவே அவர்கள் வேறு எங்கேயும் தப்பிச்சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
தப்பி ஓடியவர்களில் ஒருவன் தேனியை சேர்ந்த மருது பாண்டியன் என்பதும் மற்றவர்கள் திருச்சி, மதுரையை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
கடந்த மாதம் சீர்திருத்த பள்ளியில் இருந்த 9 பேர் காவலாளிகள் 2 பேரை தாக்கி தப்பிச்சென்று இருந்தனர். அவர்களில் 2 பேர் இன்னும் சிக்கவில்லை.
தற்போது மீண்டும் சிறுவர்கள் தப்பிச் சென்று உள்ள சம்பவம் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து சீர்திருத்த பள்ளி அதிகாரி ராமநாதனிடம் கேட்டபோது, தப்பி ஓடிய 6 சிறுவர்களும் அவர்களது உறவினர்கள் வீடு அல்லது சொந்த ஊருக்கு சென்று இருக்கலாம் என்றும், அவர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications