சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து தப்பிய 6 “ஜெகஜ்ஜால” சிறுவர்கள்….
செங்கல்பட்டு: செங்கல்பட்டு தாலுக்கா அலுவலகம் சாலையில் உள்ள அரசு சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் இருந்து தப்பிய 6 சிறுவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இங்கு பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட திருச்சி, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 34 சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
நேற்று இரவு சாப்பாடு முடிந்ததும் அனைத்து சிறுவர்களும் அவர்களது அறையில் தூங்கச் சென்றனர். நள்ளிரவு 11 மணி அளவில் ஒரு அறையில் இருந்த 6 சிறுவர்கள் ஏற்கனவே பதுக்கி வைத்திருந்த கம்பியால் சுவற்றின் ஜன்னலை உடைத்தனர்.

அதன் வழியாக புகுந்து வெளியே வந்த ஒருவன் அருகில் கிடந்த மர டேபிளை துண்டாக்கி அதன் கட்டையால் அறை பூட்டை உடைத்து உள்ளே இருந்த மேலும் 5 பேரை விடுவித்தான்.
பின்னர் அவர்கள் 6 பேரும் சீர்திருத்த பள்ளியை சுற்றி உள்ள சுமார் 30 அடி உயர சுவரை அருகில் இருந்த மரத்தில் ஏறி குதித்து தப்பிச் சென்று விட்டனர்.
நள்ளிரவில் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அறை ஜன்னலை உடைத்து 6 சிறுவர்கள் தப்பி ஓடி இருப்பது தெரிந்தது. இது குறித்து மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
தப்பி ஓடிய சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியின் பின்புறம் உள்ள கொலவாய் ஏரி வழியாக நீந்தி சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அருகில் பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளதால் இரவே அவர்கள் வேறு எங்கேயும் தப்பிச்சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
தப்பி ஓடியவர்களில் ஒருவன் தேனியை சேர்ந்த மருது பாண்டியன் என்பதும் மற்றவர்கள் திருச்சி, மதுரையை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
கடந்த மாதம் சீர்திருத்த பள்ளியில் இருந்த 9 பேர் காவலாளிகள் 2 பேரை தாக்கி தப்பிச்சென்று இருந்தனர். அவர்களில் 2 பேர் இன்னும் சிக்கவில்லை.
தற்போது மீண்டும் சிறுவர்கள் தப்பிச் சென்று உள்ள சம்பவம் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து சீர்திருத்த பள்ளி அதிகாரி ராமநாதனிடம் கேட்டபோது, தப்பி ஓடிய 6 சிறுவர்களும் அவர்களது உறவினர்கள் வீடு அல்லது சொந்த ஊருக்கு சென்று இருக்கலாம் என்றும், அவர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications