கொல்லம், தேங்காய்ப்பட்டினத்தில் இருந்து கடலுக்கு சென்ற ஏழு மீனவர்கள் மாயம் #CycloneOckhi
கன்னியாகுமரியில் இருக்கும் தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்தில் இருந்தும் கொல்லம் துறைமுகத்தில் இருந்தும் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மாயமாகி உள்ளனர்.
Recommended Video

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் இருக்கும் தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்தில் இருந்தும் கொல்லம் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மாயமாகி உள்ளனர். 30 மணி நேரமாகியும் கடலுக்கு சென்ற 7 மீனவர்களும் திரும்பி வராத காரணத்தால் மீனவர்களின் குடும்பத்தினர் பதற்றத்தில் உள்ளனர்.
ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரி மற்றும் சுற்றவட்டாரப் பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 7 மீனவர்கள் இன்னும் வீடு திரும்பாமல் உள்ளனர்.

கன்னியாகுமரியில் இருக்கும் தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து சென்ற அருளப்பன் (35), சர்ஜன் (32), ஜெயின் (36), ராகேஷ் (31) என்ற நான்கு பேர் காணாமல் போய் உள்ளனர். அதேபோல் கொல்லம் துறைமுகத்தில் இருந்து சென்ற அந்தோணி (40), கெஜின் (30), கெப்சன் (19) என்ற தமிழ்நாட்டின் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரும் காணாமல் போய் உள்ளனர்.
இதுகுறித்து மரியா விஜயன் என்பவர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் ''நேற்று காலை மீன் பிடிக்க சென்றவர்கள் இன்னும் திரும்பவில்லை. அரசு உடனடியாக அவர்களை கண்டுபிடிப்பதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் அவர்கள் வீடு திரும்பாத காரணத்தால் உடனடியாக ஹெலிகாப்டர் உதவியுடன் அவர்களை தேடி மீட்க வேண்டும். அவர்கள் அனைவரும் எளிதாக உடையக் கூடிய நாட்டுப் படகுகளில் சென்று உள்ளனர்'' என்று கவலை தெரிவித்து இருக்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications