மதுரை அருகே ஆம்னி பஸ்ஸில் சுருண்டு விழுந்த 26 வயது இளைஞர்.. இப்படியும் சாவு வருமா? ஷாக்!
மதுரை: சென்னையிருந்து தென்காசிக்கு ஆம்னி பஸ்சில் சென்ற இளைஞர், மதுரை திருமங்கலம் அருகே ஓடும் பேருந்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.இந்த சம்பவம் தொடர்பாக உடன் வந்த பயணிகளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, நாகர்கோவில் என தென் மாவட்டங்களுக்கு தினசரி ஏராளமான ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

நீண்ட தூரம் பயணிக்கும் போது சில நேரங்களில் உடல் ரீதியாக சிலருக்கு அசவுகரியம் ஏற்படலாம். முதுகு வலி, கை, கால் வலிபோன்றவை ஏற்படும். இந்நிலையில் தென்காசியைச் சேர்ந்த ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். வெறும் 26 வயது தான் ஆகிறது. இளைஞர் ஓடும் பேருந்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. என்ன நடந்தது என்பதை இப்போது பார்ப்போம்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த மாயமான்குறிச்சி என்ற கிராமத்தைச் சேர்ந்த 26 வயதாகும் முகேஷ் சென்னையில் தொழில் நிமிர்த்தமாக வசித்து வந்தார். சென்னை கோயம்பேடு பகுதியில் பிளக்ஸ் போர்டு கம்பெனியில் முகேஷ் வேலை செய்து வந்தார்
இவரது உறவினர் தென்காசியில் ஞாயிறு அன்று விஷேசம் வைத்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பிய முகேஷ், தென்காசி செல்லும் ஆம்னி பேருந்தில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார்.
இதன்படி தென்காசியில் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து குறிப்பிட்ட தனியார் ஆம்னி பேருந்தில் கடந்த சனிக்கிழமை இரவு ஏறினார்.
அந்த பேருந்து சென்னையில் இருந்து சனிக்கிழமை இரவு புறப்பட்டு ஞாயிறு அதிகாலை 4 மணி அளவில் மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் வந்தது. அப்போது முகேஷ் திடீரென வாந்தி எடுத்துள்ளார். அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டு முகேஷ் தொடர்ந்து பயணித்தார். அந்த பேருந்து திருமங்கலம் நோக்கி வந்துள்ளது.
திருமங்கலம் ஆனந்தா தியேட்டர் பேருந்து நிறுத்தத்திற்கு வந்தபோது, முகேஷ் பேருந்துக்குள் மயங்கி விழுந்து விட்டார்.இதையடுத்து பேருந்தில் இருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆம்புலன்ஸ் டிரைவர் வந்து பரிசோதனை செய்தபோது வாலிபர் முகேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து திருமங்கலம் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இளைஞரின் உடலை பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பஸ்சில் பயணித்த சக பயணிகளுடன் அந்த பஸ்சை திருமங்கலம் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு முகேஷ் அருகில் அமர்ந்து பயணித்த பயணிகளிடம் போலீசார்தீவிர விசாரணை நடத்தினர். இதனால் பேருந்தில் பயணித்தவர்கள் சுமார் 3 மணி நேரம் காவல் நிலையத்திலேயே காத்துக்கிடந்தனர். தீவிர விசாரணைக்கு பின்பு அவர்களை போலீசார் அனுப்பிவைத்தனர். அதைதொடர்ந்து அந்த பஸ் பயணிகளுடன் புறப்பட்டு தென்காசி நோக்கி சென்றது. இந்த சம்பவத்தால் திருமங்கலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications