தலைக்கேறிய சொத்து வெறி.. தந்தையின் கண்களை கைகளாலேயே நோண்டிய மகன்.. பெங்களூரில் பயங்கரம்!
பெங்களூரில் தனது பெயருக்கு சொத்தை எழுதி வைக்க மறுத்த தந்தையின் கண்களை வெறும் கைகளாலேயே நோண்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு: பெங்களூரில் தனது பெயருக்கு சொத்தை எழுதி வைக்க மறுத்த தந்தையின் கண்களை மகன் வெறும் கைகளாலேயே நோண்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரின் ஜெபி நகர் பகுதியை சேர்ந்தவர் பரமேஷ்வர். 65 வயதான இவர், ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஆவார். 6 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார்.
இவருக்கு 40 வயதில் அபிஷேக் சேட்டன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பரமேஷ்வரின் மனைவி கடந்த 2 மாதங்களுக்கு முன் இறந்தார்.

மறுத்த தந்தை
இதைத்தொடர்ந்து ஜெபி நகரில் உள்ள வீட்டை தனது பெயருக்கு மாற்றித் தரும்படி தந்தையை மகன் அபிஷேக் சேட்டன் வற்புறுத்தியுள்ளார். ஆனால் தனது மகளுக்கும் பிரித்து தர வேண்டும் கூறியுள்ளார் பரமேஷ்வர்.

கண்ணை பிடுங்கிய மகன்
இதற்கு உடன்படாத அபிஷேக் சேட்டன், தனது தந்தையுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற அபிஷேக் தனது தந்தை என்றும் பாராமல் அடித்து துன்புறுத்தியதோடு அவரது ஒரு கண்ணை வெறும் கைகளாலேயே தோண்டி எடுத்தார்.

ஓடி வந்த தந்தை
மேலும் அவரை கொலை செய்யவும் முயன்றார் அபிஷேக். இதனால் வலி தாங்க முடியாமல் ரத்த வெள்ளத்தில் துடித்த பரமேஷ்வர் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார்.

போதைக்கு அடிமை
இதைத்தொடர்ந்து அவர் அளித்த புகாரின் பேரில் அபிஷேக்கை போலீசார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்படி அபிஷேக் போதைக்கு அடிமையானவர் என்றும் எந்த வருமானமும் இன்றி வந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.

அதிர்ச்சி சம்பவம்
சொத்துக்காக பெற்ற தந்தையின் கண்களை தோண்டிய மகன் அவரை கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications