தூத்துக்குடி அருகே மீனவர் சரமாரியாக வெட்டி படுகொலை.. பதற்றம்!
குடும்ப பிரச்சனையில் மீனவர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி: குடும்ப பிரச்சனையில் மீனவர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி பிவிஆர்புரத்தை சேர்ந்தவர் லசிங்டன். இவர் தூத்துக்குடியில் மீன் பிடி தொழில் செய்து வந்தார். இவருககும் சண்முகபுரத்தை சேர்ந்த லுதர்ம்மாள் என்பவருக்கும் திருமணமாகி 10 மாத பெண் குழந்தை உள்ளது.

லசிங்டனுக்கு குடி பழக்கம் இருந்துள்ளது. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக லுர்தம்மாள் கடந்த சில வாரங்களாக தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு லசிங்டன் குழந்தையை தனது வீட்டுக்கு எடுத்து வந்துள்ளார். இது தொடர்பாகவும், லூதர்ம்மாளுடன் சேர்ந்து வாழ்வது தொடர்பாகவும் லுர்தும்மாளின் அண்ணன் மேன்சனுடன் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மாலை வழக்கம் போல் வீட்டில் இருந்து புறப்பட்ட லசிங்டன் மீன் பிடிக்க செல்வதாக கூறி சென்றுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை அவரது வீட்டுக்கு அருகேயுள்ள புல் தோட்டம தாமஸ் நகர் பகுதியில் முகம், கழுத்து, தலை ஆகிய பகுதிகளில் வெட்டு காயத்துடன் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் எஸ்பி மகேந்திரன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனையில் ஏற்பட்ட தகராறில் மேன்சன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகின்றனர்.
மேலும் மது அருந்தியது தொடர்பாக தகராறு ஏற்பட்டதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் தூத்துக்குடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications