சென்னை ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் படித்த மாணவி மர்ம மரணம்!
முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் படிப்பதற்காக தனியார் விடுதியில் தங்கி படித்து வந்த சேலம் மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
ஆத்தூர்: சென்னையில் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் படிப்பதற்காக சென்னைக்கு வந்து தனியார் விடுதியில் தங்கியிருந்த மாணவி காயத்ரி மர்மமான முறையில் இறந்ததாக கூறப்படுகிறது.
சென்னை சிஐடி நகரில் உள்ளது சைதை துரைசாமியின் ஐஏஎஸ் பயிற்சி அகாதெமி. இங்கு ஐஏஎஸ், டிஎன்பிஎஸ்சி ஆகிய தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இங்கு வெளியூரில் இருந்து வரும் மாணவர்கள், மாணவிகளுக்கு தங்கும் இடமும், உணவும் இலவசமாக அளிக்கப்படுகிறது. இங்கு பல்வேறு நிபுணர்களை கொண்டு பாடவாரியாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சேலம் ஆத்தூர் அருகே உள்ள கோம்பை பகுதியை சேர்ந்த காயத்ரி என்பவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சைதை துரைசாமியின் ஐஏஎஸ் அகாதெமியில் படித்து வந்தார். இதற்காக தனியார் விடுதி ஒன்றில் (ஐஏஎஸ் பயிற்சி அகாதெமிக்கு சொந்தமானதல்ல) தங்கியிருந்தார். இந்நிலையில் அவர் கடந்த வியாழக்கிழமை அன்று உடல்நிலை சரியில்லை என்று சகமாணவிகளிடம் கூறியதாக தெரிகிறது.
அதன்பேரில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவி காயத்ரி, சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அந்த மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படாமலேயே அவரது சொந்த ஊருக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிகிறது.
இதனை கண்டித்தும் மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அவரது உறவினர்கள் சொந்த ஊரான தங்கமாபுரிபட்டினத்தில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் போலீஸார் சமாதான பேச்சு நடத்தி வருகின்றனர்.
சைதை துரைசாமி விளக்கம்
மாணவி மரணம் குறித்து முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஒன் இந்தியாவுக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில், மாணவி காயத்ரி எங்கள் பயிற்சி மையத்தில்தான் படித்து வந்தார். ஆனால் அவர் தனியார் விடுதியில்தான் தங்கியிருந்தாரே தவிர, எங்கள் விடுதியில் அல்ல. மேலும் மாணவியின் மரணத்துக்கும் எங்கள் பயிற்சி நிறுவனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார் அவர்.

-
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications