வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை: வானிலை மையம் பலத்த மழை வார்னிங்.. வர்லாம் வரலாம் வா!
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வும் மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையால் சென்னை உட்பட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்ததால் தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. பல தனியார் வானிலை ஆய்வாளர்களும் இதையே கூறியிருந்தனர்.

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை
இந்நிலையில் இலங்கை அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக டெல்டா மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்டாவில் மிக கனமழை
வரும் 24 மணி நேரத்தை பொறுத்தவரை கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களில், உள்மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறிள்ளது. மேலும் தென் தமிழகம், டெல்டா, கடலோர மாவட்டங்கள், காரைக்கால் மற்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

சென்னையில் இடியுடன் மழை
சென்னையை பொறுத்தவரை விட்டு விட்டு மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையில் சிலமுறை இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார்.

வழக்கத்தை விட குறைவு
வடகிழக்குப் பருவமழை வழக்கமாக பெய்ய வேண்டிய 23 சென்டிமீட்டரில் இருந்து 1 சென்டி மீட்டர் குறைந்துள்ளதாகவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. தற்போது வரை 22 சென்டி மீட்டர் மழை மட்டுமே பெய்துள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஆணைக்காரன் சத்திரத்தில் 19 செ.மீ
கடந்த 24 மணிநேரத்தில் அதிகளவாக நாகை மாவட்டம் ஆணைக்காரன் சத்திரத்தில் 19 சென்டி மீட்டரும் சிதம்பரத்தில் 15 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. வானூர் 8, காட்டுமன்னார் கோவில், மயிலாடுதுறையில் 7 சென்டி மீட்டரும், கும்பகோணம், திருவிடைமருதூர், காரைக்காலில் 6 செ.மீ.,மழையும் பெய்துள்ளது.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications