இடது காலில் எலும்பு முறிவுக்கு வலது காலில் கட்டு?.. தென்காசி மருத்துவமனை மீது உறவினர்கள் புகார்!
தென்காசி: இடது கால் முறிவு ஏற்பட்ட நபருக்கு வலது காலில் கட்டு போட்டு அதே கட்டுடன் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அதிர்ச்சி சம்பவத்தை தென்காசி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் செய்துள்ளதாக புகார்கள் எழுந்தன. எனினும் இது குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளித்தால் மட்டுமே நடந்தது என்ன என்பது குறித்து முழுமையாக தெரியும்.
தென்காசி மாவட்டம், கீழப்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் மாடசாமி. இவர் தனது வீட்டு மாடியில் இருந்து கால் தவறி விழுந்துள்ளார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

எக்ஸ்ரே பரிசோதனை
அவருக்கு எக்ஸ்ரே ஸ்கேன் எடுத்து பரிசோதித்தபோது மாடசாமியின் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு காலில் சிகிச்சை அளித்து மாவு கட்டுப் போட்டனர். ஆனால் மாடசாமியின் இடது காலுக்கு பதில் வலது காலில் கட்டு போடப்பட்டிருப்பதை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மருத்துவர்கள் கவனக்குறைவு
அதாவது மருத்துவர்கள் கவனக்குறைவாக மாடசாமியின் இடது காலில் கட்டு போடுவதற்கு பதில் வலது காலில் கட்டு போட்டுள்ளனர். இதுகுறித்து மாடசாமி உறவினர்கள் மருத்துவர்களிடம் கேட்டபோது, தெரியாமல் நடந்துவிட்டது என்றும் எலும்பு முறிவு அதிகமாக இருப்பதால் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்றும் கூறியதாக தெரிகிறது.

வலது காலில் போடப்பட்ட கட்டு
இதையடுத்து வலது காலில் போடப்பட்ட கட்டை அவிழ்த்து முறைப்படி இடது காலில் போட்டு அனுப்பும்படி உறவினர்கள் கேட்டுள்ளனர். ஆனால் அதற்கும் மருத்துவர்கள் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தவறாக போடப்பட்ட கட்டுடன் மாடசாமியை அவரது உறவினர்கள் திருநெல்வேலி அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

மருத்துவர்கள் சிகிச்சை
அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் கவன குறைவால் எலும்பு முறிவு ஏற்பட்ட நபருக்கு தவறுதலாக கட்டுப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் எந்தவித விளக்கத்தையும் அளிக்கவில்லை.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications