நெல்லை அருகே கோவில் திருவிழாவில் யானை தாக்கி பெண் உயிரிழப்பு!
நெல்லை அருகே கோவில் திருவிழாவில் யானை தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
நெல்லை: சீவலப்பேரி கோவில் திருவிழாவில் யானை தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் சீவலப்பேரி கோவிலில் புத்தாண்டு மற்றும் சித்திரை விசுவை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடத்தப்பட்டன.

சீவலப்பேரி கோவிலில் சித்திரை திருவிழாவும் நடைபெற்றது. அப்போது பத்ரகாளி என்ற பெண்ணை கோவில் யானை தாக்கியது.
யானை தும்பிக்கையால் தூக்கி வீசியதில் பத்ரகாளி என்ற பெண் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications