ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்களுக்கு ஆதார் கட்டாயம்!
ஜல்லிக்கட்டில் காளையை அடக்கவும் காளை உரிமையாளர்களுக்கும் ஆதார் கார்டு அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை: ஜல்லிக்கட்டில் காளையை அடக்கவும் காளை உரிமையாளர்களுக்கும் ஆதார் கார்டு அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றாலும் மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு உலகப் புகழ்பெற்றது.
அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒட்டுமொத்த நிர்வாகமும் இறங்கி வேலை செய்யும்.

ஜல்லிக்கட்டு அறிவிப்பு
இந்நிலையில் மூன்று இடங்களிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதிகள் அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி அவனியாபுரத்தில் 14-ம் தேதியும், பாலமேட்டில் 15-ம் தேதியும், அலங்காநல்லூரில் 16-ம் தேதியும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.

ஜல்லிக்கட்டு நேரம் நீட்டிப்பு
இந்தாண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் காலை எட்டு மணியிலிருந்து மாலை மூன்று மணிவரை நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு ஒரு மணி நேரம் நீடிக்கப்பட்டுள்ளது.

ஆதார் கார்டு கட்டாயம்
அவனியாபுரத்தில் 14ம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் முன்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் காளையை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கு ஆதார் கார்டு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டுக்கும் ஆதார்
இதுவரை மத்திய மாநில அரசுகளின் திட்டங்களை பெறவும் சலுகைகளை பெறவுமே ஆதார் கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது ஜல்லிக்கட்டுக்கும் ஆதார் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications