"உங்களுக்கு ஒரு குறும்படம் என்றவுடன்"... "எங்கே எடுத்தது" என கேட்டு சிரிப்பலையை ஏற்படுத்திய கமல்!
பிக்பாஸ் கிரான்ட் பினாலே நிகழ்ச்சியில் கமலுக்காக ஒரு குறும்படம் என்று பிக்பாஸ் தெரிவித்தவுடன் அது எங்கே எடுத்தது என்று கேட்டு கமல் சிரிப்பலையை ஏற்படுத்தினார்.
சென்னை: பிக்பாஸ் போட்டியின் வெற்றியாளரை அறிவிக்க நடந்த விழாவில் கமலுக்காக ஒரு குறும்படம் போடப்படுகிறது என்றவுடன் அது எங்கே எடுத்தது என்று கேட்டார் கமல்.
பிக்பாஸ் என்ற பொழுது போக்கு நிகழ்ச்சியை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். முதலில் 15 போட்டியாளர்களும், பின்னர் விறுவிறுப்பு குறைந்தவுடன் மேலும் 4 புதிய போட்டியாளர்கள் என மொத்தம் 19 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

முகத்திரை கிழிப்பு
ஓவியாவுக்கும் ஜூலிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டபோது ஓவியா தன்னை ட்விஸ்ட் செய்து விட்டார் என்று சக போட்டியாளர்களிடம் ஜூலி தெரிவித்தார். ஜூலியின் இரட்டை வேடத்தை சக போட்டியாளர்களுக்கு காட்ட வேண்டும் என்பதற்தாகவே ஒரு குறும்படத்தை வெளியிட்டார் கமல். அதன் மூலம் ஜூலியின் பொய்யான முகம் வெளியானது. இதனால் ஓவியாவிடம் சிலர் மன்னிப்பும் கேட்டனர்.

ஆரவை அதிர வைத்த
ஆரவுக்கும், சினேகனுக்கும் நடந்த பிரச்சினையில் சினேகனிடம் மன்னிப்பு கேட்ட ஆரவ், உள்ளே சென்று காயத்ரி, ரைசாவிடம் தான் மன்னிப்பே கேட்கவில்லை என்றார். ஒரு டாஸ்கின்போது இதை ஒப்புக் கொள்ளாத ஆரவுக்கு இதுகுறித்தும் குறும்படம் காட்டப்பட்டு அவரது சாயத்தை வெளுத்தார் கமல்.

ஒவ்வொரு போட்டியாளருக்கும்
அதேபோல் ஒவ்வொரு போட்டியாளர்களும் வெளியேறும் போது அவர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தது முதல் கடைசியாக எலிமினேட் ஆனது வரை தொகுத்து குறும்படம் வெளியிடப்படும். ஜூலி, ஆரவின் குறும்படங்களுக்கு பிறகு, குறும்படம் என்றாலே போட்டியாளர்கள் நடுங்கும் நிலை ஏற்பட்டது.

கமலால் சிரிப்பலை
பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிரான்ட் பினாலே போட்டி நேற்று நடைபெற்றது. இதில் பிக்பாஸ் வீட்டில் கடைசி வரை இருந்த ஆரவ், சினேகனை மேடைக்கு அழைத்து வர கமல்ஹாசன் செல்லவிருந்தார். அ்போது பிக்பாஸ், உங்களுக்காக ஒரு குறும்படம் என்றார். அதற்கு கமல் எனக்கு குறும்படமா அது எங்கே எடுக்கப்பட்டது என்றார். அதற்கு பிக்பாஸ் இங்கேதான் என்றவுடன் அப்பாடா என்றார் கமல். உடனே அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.












Click it and Unblock the Notifications