ஊரே கூடி ஊழல் என்று ஓலமிட்டதே.. எடப்பாடி அரசுக்கு கமல் கொடுத்த பகிரங்க அடி!
அதிமுக அரசு ஊழலில் திளைத்தது என நடிகர் கமல்ஹாசன் தனது அறிக்கையின் மூலம் மீண்டும் தெளிவாக கூறியுள்ளார்.
சென்னை: அதிமுக அரசு ஊழலில் திளைத்தது என நடிகர் கமல்ஹாசன் தனது அறிக்கையின் மூலம் மீண்டும் தெளிவாக கூறியுள்ளார்.
தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கிறது என நடிகர் கமல்ஹாசன் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் அனைவரும் வரிசைக்கட்டி நடிகர் கமல்ஹாசனை திட்டி தீர்த்தனர்.
நேற்று நடிகர் கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டு டிவிட் அவர் அரசியலுக்கு வருவதை உணர்த்துவதாக இருந்தது. இந்நிலையில் நடிகர் கமல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஊரே கூடி ஊழல் என்று ஓலம்
அதில் அதிமுக ஊழலில் திளைத்த கட்சி என மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஊழல் வழக்கில் சிறைக்கு சென்றதை, ஊரே கூடி ஊழல் என்று ஓலமிட்டது என குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் தேவையா?
அந்த ஊழல் வழக்கு குறித்து ஊடகத்தில் ஒளிப்பரப்பிய பின்பும் சாட்சி மற்றும் ஆதாரம் தேவையா என்றும் அவர் வினவியுள்ளார். ஊழல் குற்றச்சாட்டு குறித்து அமைச்சர்கள் கேள்விக் கேட்டதற்கும் கமல் நச் என தனது அறிக்கையில் பதிலளித்துள்ளார்.

அதற்குள் மறந்துவிட்டதா?
அதாவது ஊரெல்லாம் கேட்ட அதிமுக அரசின் ஊழல் அதற்குள் மறந்திருந்தால் அதனை மக்களே நினைவு படுத்துவார்கள் என கூறியுள்ளார். மக்கள் சந்திக்கும் ஊழல் பிரச்சனைகள் குறித்து மக்கள் இணையதளம் மூலமாக தங்களின் புகார்களை அனுப்ப வேண்டும் என கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமைச்சர்களின் முகவரி
கார்டு, கடிதம் என எழுதி அனுப்பினால் கிழித்து போட்டு விடுவார்கள் என்று கூறியுள்ள கமல், டிஜிட்டல் யுகம் என்பதால் இமெயிலாக அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அதற்காக அமைச்சர்கள் துறைசார்ந்த முகவரியையும் அவர் வெளியிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications