ஆதார் எண் இருந்தால் தான் இனிமேல் வாகனங்கள் வாங்க முடியுமாம்!
புதிய வாகனங்களை வாங்கி, பதிவு செய்ய வேண்டுமானாலும் ஆதார் எண், பான் கார்டு மற்றும் செல்பேசி எண் இன்று முதல் கட்டாயம் என மாநில போக்குவரத்துத் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகம் முழுவதும், புதிய வாகனங்களை பதிவு செய்வதற்கு ஆதார் எண், பான் கார்டு மற்றும் செல்பேசி எண் ஆகியவற்றை சமர்பிப்பது இன்று முதல் கட்டாயமாக்கப்படுகிறது என போக்குவரத்துத் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே தமிழகத்தில் அதிக அளவு வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், தினம் தினம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் புதிதாக பல ஆயிரம் வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

இந்நிலையில், இனி தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களும் புதிய வாகனங்களைப் செய்யும்போது உரிமையாளரின் ஆதார் எண், செல்பேசி எண் மற்றும் பர்மனெண்ட் அக்கவுண்ட் நம்ப்பர் எனப்படும் பான் நம்பர் ஆகியவற்றை கட்டாயமாகக் கொடுக்க வேண்டும் என போக்குவரத்துத் துறை ஆணையர் தயானந்த் கட்டாரியா சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
ஆகையால், புதிய வாகனத்தை பணம் கொடுத்து கஷ்டப்பட்டு வாங்கினாலும், அதை பதிவு செய்ய பான் நம்பரும் ஆதார் எண்ணும் கட்டாயம் என்பதால், வாகனம் வாங்குவதற்கு முன்பு, இந்த ஆவணக்கள் எல்லாம் இருக்கிறதா என்பதை உறுதிசெய்துகொண்ட பின்பே புதிதாக வாகனம் வாங்க முடியும் என்ற நிலை உள்ளது.
மத்திய அரசு பல்வேறு வகைகளில் ஆதார் அவசியம் என்று வலியுறுத்தினாலும் இதுவரை 80 சதவித மக்களே ஆதார் எண் பெற்றுள்ளனர். அதேபோல், நிரந்தர வருவாய் பெறும் மக்களைத் தவிர, பெரும்பாலானோரிடம் பான் நம்பர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உத்தரவால் மாணவர்கள், இல்லத்தரசிகள் தங்கள் பெயரில் வாகனம் வாங்குவதும் பதிவு செய்வதும் சிக்கலுக்குள்ளாகியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications