வாங்க பேசுவோம்... அவதூறா பேசினா பதிலடிதான் தருவோம் - ஜெயக்குமார்
இப்பவும் வாங்க பேசுவோம்... எங்களைப்பற்றி அவதூறு பேசினால் பதிலடிதான் தருவோம் என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை: ஓபிஎஸ் அணியினரை இப்போதும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறோம். அவர்கள் வந்தால் அமர்ந்து பேசலாம். அதை விட்டு விட்டு ஆளுக்கு ஒரு கருத்து சொன்னால் எப்படி நாங்களும் பதிலடி தருவோம் என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
நிதியமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற சகோதரர்கள் கட்சிக்கு திரும்ப வர வேண்டும் என்றார்.
இப்போதும் நாங்கள் பேச தயாராகவே இருக்கிறோம். அவர்கள் வரட்டும், வந்து பேசினால் கட்சியிலும், ஆட்சியிலும் உரிய மரியதை தர தயாராகவே இருக்கிறோம்.

ஆளுக்கு ஒரு கருத்து
அவர்கள்தான் ஆளுக்கு ஒரு கருத்தை கூறி பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். ஜெயலலிதாவின் ஆசியுடன் நடக்கும் இந்த ஆட்சி நான்கு ஆண்டுகள் மட்டுமல்ல மேலும் பல ஆண்டுகள் நீடிக்க வேண்டும் என்றே ஒவ்வொரு அதிமுக தொண்டரும் விரும்புகின்றனர்.

பதிலுக்கு பதில்
எதிர்கட்சியினர், திமுகவினர் யாராவது ஒரு கருத்தை சொன்னால் அதற்கு பதிலடி தருவோம். அதே போலத்தான் ஓபிஎஸ் அணியினர் கூறும் கருத்துக்கும் பதிலடி கொடுத்து வருகிறோம். எங்களைப் பற்றி அவதூறு பேசினால் நாங்கள் எப்படி பொறுத்துக்கொள்வோம் என்று கேட்டார் ஜெயக்குமார்.

இழுபறியில் பேச்சுவார்த்தை
இரு அணிகளும் இணைய வேண்டுமானால் சசிகலா குடும்பத்தை கட்சியிலிருந்து நீக்கவேண்டும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும் என ஓபிஎஸ் அணி நிபந்தனை விதித்துள்ளது. இதனை ஏற்க ஈபிஎஸ் அணி மறுப்பதால் பேச்சுவார்த்தை நடத்துவதில் இழுபறி நிலவி வருகிறது.

மதுசூதனன் குற்றச்சாட்டு
ஈபிஎஸ் அணியில் இருந்து திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமாரை நீக்க வேண்டும் என்றும் மதுசூதனன் வலியுறுத்தியுள்ளார். அவர்கள் இருவரும் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டையாக உள்ளனர் என்றும் மதுசூதனன் குற்றம்சாட்டியுள்ளார் இந்த நிலையில் ஜெயக்குமார் இவ்வாறு பேசியுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications