ஓகி புயலால் கடலில் தத்தளிக்கும் மீனவர்கள்... அரசுக்கு உத்தரவிடக்கோரி ஹைகோர்ட்டில் மனு
ஒகி புயலால் கடலில் தவித்து வரும் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிடகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஒகி புயலால் கடலில் மாயமான மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கறிஞர் சூர்யபிரகாஷ் தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி மற்றும் சுந்தர் அமர்வு முன் முறையிட்டுள்ளார்.
அதில், கடலில் மீன் பிடிக்கச் சென்ற 2000 மீனவர்கள் ஒகிபுயலால் மாயமாகி உள்ளனர். அவர்களை மீட்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து அவரது கோரிக்கைகளை மனுவாக தாக்கல் செய்ய வழக்கறிஞருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.













Click it and Unblock the Notifications