சசிகலா குடும்பத்தில் அடுத்தடுத்து மரணங்கள்- கவலையில் உறவினர்கள்!
சசிகலா குடும்பத்தில் அடுத்தடுத்து மரணங்கள் நிகழ்ந்திருப்பதால் உறவினர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்து போயுள்ளனராம்.
தஞ்சாவூர்: சசிகலா குடும்பத்தில் மரணங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்திருப்பதால் மன்னார்குடி உறவினர்கள் பெரும் கவலையடைந்துள்ளனராம்.
சசிகலா அண்ணியின் மரண நிகழ்வில் மகிழ்ச்சியோடு கை குலுக்கிக் கொண்டார்கள் தினகரனும் திவாகரனும். குடும்ப உறவுகள் அனைவரும் ஒன்று திரண்டுவிட்டனர். இனி எடப்பாடிக்கு சிக்கல்தான் என்ற ரீதியில் செய்தியில் பரவுகின்றன.
உண்மையில், அடுத்தடுத்த மரணங்களால் சசிகலாவின் உறவினர்கள் கவலையில் உள்ளனராம். சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மனைவி சந்தான லட்சுமி, நீண்டநாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். சென்னையில் நேற்று சந்தானலட்சுமி காலமானார்.

சுந்தரவதனம்
சுந்தரவதனமும் கூட நடக்க முடியாத அளவுக்கு நோய்வாய்ப்பட்டிருக்கிறார். அவர் சென்னையில் தான் இருக்கிறாராம்.

மகாதேவன்
ஓரிரு மாதங்களுக்கு முன்னால் சசிகலா அக்கா மகன் மகாதேவன் மரணம் அடைந்தார். இவர் மீது சசிகலா மிகுந்த பாசம் வைத்திருந்தார். அந்தக் குடும்பத்திலேயே பணத்தின் மீது பெரிதாக ஆசை காட்டாமல், தொண்டர்களிடையே தனக்கு என செல்வாக்கை உருவாக்கி வைத்திருந்தவர் மகாதேவன்.

சசியால் ஜீரணிக்க முடியவில்லை
அவரது மரணத்துக்கும் சசிகலாவால் வர முடியவில்லை. மகாதேவனுக்கு அடுத்தபடியாக, அண்ணி சந்தானலட்சுமி மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார் சசிகலா. அவரும் மரணத்தைத் தழுவியதை சசிகலாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஜோதிடர்களுடன் ஆலோசனை
சசிகலா சிறையில் உள்ள இந்தக் காலகட்டத்தில், தொடர்ச்சியாக குடும்ப உறவுகள் மரணிப்பதால் பெரும் கவலை அடைந்தனர். இது தொடர்பாக ஆஸ்தான ஜோதிடர்களிடம் ஆலோசனை நடத்தியதில் சில பரிகாரங்களை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். இதனால்தான் கடந்த சில நாட்களாக சசிகலா குடும்பத்தினர் பரிகாரங்களில் தீவிரமாக உள்ளனராம்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications