"லைட்"டாதான் மது அருந்தியிருந்தார் "ஆடி கார்" ஐஸ்வர்யா.. வக்கீல் வாதம்!
சென்னை: ஆடி காரை அதி வேகமாக ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தி முனுசாமி என்ற தொழிலாளரின் உயிரைப் பறித்த வழக்கில் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்த ஐஸ்வர்யா, அதில் தான் மிகக் குறைந்த அளவிலேயே மது அருந்தியதாக கூறியிருந்தார்.
ஆனால் இந்த மனுவை விசாரணைக்கே ஏற்காமல் தள்ளுபடி செய்து விட்டது உயர்நீதிமன்றம். இந்த வழக்கில் முறைப்படி செஷன்ஸ் கோர்ட்டில்தான் ஐஸ்வர்யா ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் நேரடியாக உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இதனால்தான் விசாரணையே செய்யாமல் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் அவரது ஜாமீன் மனுவில் கூறப்பட்டிருந்த கோரிக்கைகள் குறித்துத் தெரிய வந்துள்ளது. அதுகுறித்த ஒரு பார்வை...ஜூலை 1ம் தேதி இரவு என்னுடைய நண்பர்களுடன் சினிமாவிற்குச் சென்றிருந்தேன்.
- படம் பார்த்து விட்டு ஓ.எம்.ஆர் ரோட்டில் வேலை பார்க்கும் நண்பர் ஒருவரை அழைத்துக் கொண்டு, எனது காரில் வந்து கொண்டிருந்தேன்.
- அப்போது சாலையைக் கடக்க முயன்ற முனுசாமி என்பவர் என்னுடைய ஆடி காரில் அடிபட்டுவிட்டதாக சொல்கின்றனர்.
- இந்த விபத்தில் முனுசாமி சம்பவ இடத்தில் உயிர் இழந்தார்.
- அங்கிருந்த போலீஸார் என்னைப் பிடித்து விசாரித்துவிட்டு, 2ம் தேதி என்னைக் கைது செய்தனர்.
- என் மீது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியது; கவனக்குறைவால் விபத்தை உருவாக்கியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- இதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.
- எனக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை.
- பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் வாங்கியிருக்கிறேன்.
- எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்.
இதுதான் ஐஸ்வர்யா தாக்கல் செய்திருந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஐஸ்வர்யாவின் வக்கீல் வாதிடுகையில், அனுமதிக்கப்பட்ட அளவை விட குறைந்த அளவில்தான் ஐஸ்வர்யா மது அருந்தியிருந்தார். இது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. ஆனால் ஊடகங்கள்தான் இதைப் பெரிதாக்குகின்றன என்று வாதிட்டார். ஆனால் அவரது வாதத்தை நீதிபதி வைத்தியநாதன் ஏற்கவில்லை.
யார் இந்த ஐஸ்வர்யா?
ஆடி கார் ஐஸ்வர்யா என்று இந்த வழக்கு இப்போது மக்களிடையே விவாதப் பொருளாகியுள்ளது. இவர் பிரபல வர்த்தக ஆலோசகர் வில்சனின் மகள் ஆவார். சாப்ட்வேர் என்ஜீனியராக இருக்கிறார். கடந்த சனிக்கிழமையன்று இரவு படத்துக்குப் போய் விட்டு திரும்பும் வழியில் காரிலேயே தனது நட்புப் பட்டாளத்தோடு மது அருந்தியுள்ளார். பின்னர் வீட்டுக்குப் போக பயந்து கொண்டு சோழிங்கநல்லூரில் உள்ள தனது தோழியின் வீட்டுக்குச் செல்ல முடிவு செய்தார்.
ஓம்எம்ஆர் சாலையில் அவர் ஆடி காரை படு வேகமாக ஓட்டியபோது நிதானமிழந்து போயுள்ளது கார். அப்போது திருவான்மியூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முனுசாமி என்பவர் மீது கார் மோதியதால், சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இந்த வழக்கில்தான் ஐஸ்வர்யா கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது புழலில் உள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications