நீட் தேர்வை எதிர்த்து தமிழகம் முழுவதும் அனைத்துக்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்துக்கட்சி போராட்டம் நடைபெற்றது.
Recommended Video

சென்னை: நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்துக்கட்சி போராட்டம் நடைபெற்றது.
நீட் தேர்வால் மருத்துவம் படிக்க முடியாமல் போனதால் அரியலூர் மாணவி அனிதா அண்மையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைத்தொடர்ந்து நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுக சார்பில் இன்று அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய மாநில அரசுகளை கண்டித்து முழக்கம் எழுப்பினர். இந்த போராட்டத்தில் திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தின் போது, மாணவி அனிதாவின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதேபோல் திருச்சி, திருவண்ணாமலை உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெறும் போராட்டத்தில் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். புதுச்சேரியில் தலைமை தபால் நிலையம் அருகே முதல்வர் நாராயணசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
-
Election Exclusive: கூட்டணியில் ’சிவப்பு’ சிக்னல்.. தோழர்களை கூலாய் ஹேண்டில் செய்யும் ஸ்டாலின்! பரபரப்புக்களுக்கு எண்ட்! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
லோக்கல் பாலிடிக்ஸ்..கண் வைத்த கனிமொழி! க்ரீன் சிக்னல் கொடுக்காத ’உடன்பிறப்பு’..’சிலருக்கு’ சிக்கலாமே -
4 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு? முதல்வரான ஜெயலலிதா.. 2001இல் கருணாநிதி பேசிய கடைசி தேர்தல் வசனம்! -
5 தொகுதிகள் ஒதுக்கும் திமுக.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு என்ன? 6 மணி நேரமாக நடந்த ஆலோசனை -
"6 தொகுதிகளிலும் ஜெயித்திருப்போம்!" 2021 தேர்தல் குறித்து சிபிஎம் பெ.சண்முகம் அதிரடி விளக்கம்! -
வேல்முருகன் வெளியேற்றம்.. கடலூரில் திமுகவுக்கு இழப்புதான்.. சொல்கிறார் பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்! -
சட்டசபை தேர்தலில் முன்னாள் அமைச்சர் பொன்முடி போட்டியில்லை? திருக்கோவிலூர் தொகுதியில் மகனுக்கு சீட் -
கோவை மாவட்டத்தில் 6 தொகுதிகளை கேட்கும் கூட்டணி! திமுகவுக்கு நிம்மதி கொடுத்த அந்த ரிப்போர்ட்! -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு?












Click it and Unblock the Notifications