For Daily Alerts
Just In
2 நாட்களாக மூடப்பட்டிருந்த சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு
சென்னை: வெள்ளத்தால் மூடப்பட்டருந்த சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்கள் இயங்க தொடங்கியுள்ளன. மதியம் முதல் எக்மோரில் இருந்து ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், சென்ட்ரலில் இரவு ரயில்சேவை தொடங்கியது.
வெள்ளம் சூழ்ந்ததால், கடந்த 3ம் தேதி, வியாழக்கிழமை, இவ்விரு ரயில் நிலையங்களும் மூடப்பட்டது. மழை குறைந்த நிலையில், இரவும், பகலுமாக தெற்கு ரயில்வே ஊழியர்கள், தொடர்ந்து பணியாற்றி, வெள்ள நீரை அப்புறப்படுத்தினர்.
இதையடுத்து இன்று மதியம் முதல் எழும்பூர் ரயில் நிலையம் வழக்கம்போல பயன்பாட்டுக்கு வந்தது. இரவு முதல் சென்ட்ரல் ரயில் நிலையம் பயன்பாட்டுக்குவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை, மாற்று ரயில் நிலையங்களாக கடற்கரை, அரக்கோணம், திருவள்ளூர் போன்றவை பயன்படுத்தப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
All train services from Chennai Central and Egmore are being resumed from midnight tonight. Southern Railway team that has worked day and night over the last few days, inspected every inch of track for flooding, gone over safety aspects and ensured quick resumption of services.