திமுகவின் இன்றைய மாநாட்டில் இவர்களெல்லாம் பேசுகிறார்கள்!
திருச்சி: திமுக 10வது மாநில மாநாட்டில் இன்று மாலை கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பேசுகிறார்கள்.
தி.க. தலைவர் கி.வீரமணி தொடங்கி, சமீபத்தில் கூட்டணியில் இணைந்த சிறுபான்மை சமூகப் புரட்சி இயக்கத் தலைவர் லியாகத் அலிகான் வரை பலரும் பேசவுள்ளனர்.
இந்தத் தலைவர்கள் பேசி முடித்ததும் திமுக தலைவர் கருணாநிதி நிறைவு சிறப்புரையாற்றுவார்.
திமுக மாநாட்டில் இன்று மாலை பேசப் போகும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் விவரம்...
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொகிதீன், மனித நேய மக்கள் கட்சியின் சட்ட மன்றக்குழுத்தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாகிருல்லாஹ் எம்.எல்.ஏ.
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் க.கிருஷ்ணசாமி, எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் கு.செல்ல முத்து, மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார்.
தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சித்தலைவர் பொன்.குமார், இந்திய சமூக நீதி இயக்கத் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம், அகில இந்திய பார்வர்டு பிளாக் தலைவர் எல்.சந்தானம், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் அமைப்பாளர் என்.ஆர்.தனபாலன், தமிழ் மாநில தேசிய லீக் பொதுச்செயலாளர் திருப்பூர் அல்தாப்.
அகில இந்திய வல்லரசு பார்வர்டு பிளாக் நிறுவனத்தலைவர் பி.என்.அம்மாசி,சிறுபான்மை சமூகப்புரட்சி இயக்கத்தின் தலைவர் லியாகத்அலிகான்.












Click it and Unblock the Notifications