ஜெ. கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கில் ஒருவருக்கு நிபந்தனை ஜாமீன்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவருக்கு நீலகிரி நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
கோத்தகிரி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் கைதாகி இருந்த ரமேஷ்சாமி என்பவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீலகிரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம் பகதூர் கொல்லப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர் பலத்த காயமடைந்தார். மேலும், பங்களாவில் இருந்த பொருட்களும் கொள்ளை அடிக்கப்பட்டன.

இந்தக் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே போன்று கொலையாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறினார்கள். இதுகுறித்து, கோத்தகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில் 11 பேருக்கு இதில் தொடர்புள்ளது எனக் கண்டறிந்தனர்.
அதில் முதன்மை குற்றவாளியான ஜெயலலிதாவின் மாஜி கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் மரணம் அடைந்தார். இந்நிலையில் 10 பேரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவர்களில் உதயகுமார், சதீசன், தீபு, மனோஜ், குட்டி ஆகிய ஐவர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான ரமேஷ்சாமி என்பவர் ஜாமீன் கேட்டு நீலகிரி நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். அவருடைய மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது அவருக்கு நிபந்தனை ஜாமீனை வழங்கி நீலகிரி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, கோத்தகிரி காவல் நிலையத்திற்குத் தினமும் சென்று ரமேஷ்சாமி கையெழுத்திட வேண்டும்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications