போப் பெண்ணாக இருக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளிக்குமா- அன்புமணி கேள்வி
Recommended Video

போப் பெண்ணாக இருக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளிக்குமா- அன்புமணி கேள்வி
சென்னை: கிறிஸ்துவ மதத்தில் போப், பெண்ணாக இருக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளிக்குமா என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சபரிமலை கோயிலுக்குள் 10 வயது முத்ல 50 வயது வரையிலான பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள் நிலக்கல்லில் கூடி சபரிமலைக்கு வரும் பெண்களை விரட்டி அடித்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து பிரபலங்களின் கருத்துகள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றன. அதில் பெரும்பாலானோர் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்கின்றனர்.

ஐதீகம்
நடிகர் ரஜினிகாந்தோ பெண்களுக்கு சம உரிமை கொடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதே சமயம் கோயில் ஐதீகங்களில் யாரும் தலையிட முடியாது என்று தெரிவித்தார்.
[காற்றில் பறக்கிறது ட்ரம்ப்பின் மானம்.. பேபி பலூனில் அழுமூஞ்சு அதிபரின் முகம் ]

தனிப்பட்ட கருத்தாகும்
இதுபோல் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார். அவர் கூறுகையில் சபரிமலையின் பாரம்பரிய விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட கூடாது என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.

தீர்ப்பளிக்க முடியுமா
தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலுக்கு நுழைய கூடாது என்பது போன்ற விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடலாம். கிறிஸ்துவ மதத்தில் போப், பெண்ணாக இருக்க வேண்டும் என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்க முடியுமா. முடியாது இல்லையா.

ஒப்பிடக் கூடாது
நான் மருத்துவராக இருக்கலாம். ஆனால் சபரிமலைக்கு பெண்கள் நுழையக் கூடாது என்பது ஏன் என்பது குறித்து உள்ளே போக வேண்டாம். இது என்னுடைய கருத்து. மதத்தில் விஞ்ஞானத்தை புகுத்த வேண்டாம். நான் கூறிய மாற்றம், முன்னேற்றம் என்பது தமிழகத்தில் ஊழலில் இருந்து முன்னேறுவதற்காக கூறியது, இரண்டையும் ஒப்பிட கூடாது என்றார் அன்புமணி ராமதாஸ்.












Click it and Unblock the Notifications