வாய்ப்பு கொடுத்தால் சிபிஎஸ்இ முறையை விட தரமான கல்வியை தருவோம்... அன்புமணி
பாமகவுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால் சிபிஎஸ்இயை விட தரமான கல்வியை அதுவும் இலவசமாக கொடுக்க முடியும் என்று தருமபுரி எம்பி அன்புமணி கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தை ஆள்வதற்கு எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால் சிபிஎஸ்இயைவிட தரமான கல்வியைக் கொடுக்க முடியும் என்று தருமபுரி எம்.பி.யும் பாமக இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
பள்ளிக்கல்வி துறையின் செயல்பாடுகள் குறித்தும் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் உதயசந்திரன் இடமாற்றம் செய்ய அரசு திட்டமிட்டிருந்தது குறித்தும் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக கல்வித் துறையில் முறைகேடா? அதை நேருக்கு நேர் விவாதிக்க அன்புமணி தயாரா? என்று அமைச்சர் செங்கோட்டையன் சவால் விடுத்திருந்தார்.
அதையேற்ற சவாலுக்கு தாம் தயாராக உள்ளதாக கூறி ராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவையில் மாலை 4 மணிக்கு விவாதத்தை வைத்துக் கொள்ளலாம் என்றும் அன்புமணி தெரிவித்திருந்தார். இதன்படி 4 மணிக்கு முத்தமிழ் பேரவைக்கு அன்புமணி வந்திருந்தார்.

விவாதத்துக்கு வராத செங்கோட்டையன்
அங்கு மேடையில் இருநாற்காலிகள் போடப்பட்டிருந்தன. ஒரு நாற்காலியில் அன்புமணி உட்கார்ந்திருந்தார். மற்றொன்று செங்கோட்டையனுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் இறுதி வரை செங்கோட்டையன் வரவே இல்லை.

90% பேர் ஊழலில்..
இதனால் மீண்டும் அவருக்கு அன்புமணி அழைப்பு விடுத்தார். செங்கோட்டையனுக்காக காத்திருந்து அவர் வராததால் முத்தமிழ் பேரவைக்கு வெளியே வந்த அன்புமணி செய்தியாளர்களிடம் பேசியதாவது: தமிழக அரசில் பணியாற்றும் செயலாளர்களில் 90 சதவீதம் பேர் ஊழலில் சிக்கியவர்களாகவே இருக்கின்றனர். 10 சதவீதம் பேர் மட்டுமே நேர்மையாக இருக்கின்றனர்.

நேர்மையான அதிகாரிகள்
அமைச்சர்கள் சொல்லும் எல்லாவற்றையும் அதிகாரிகள் கேட்கக் கூடாது. நல்ல நேர்மையான, திறமையான அதிகாரிகள் அரசில் அங்கம் வகிக்க வேண்டும். அப்போதுதான் கல்வித் துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அதன் தரத்தையும் உயர்த்த முடியும்.

இலவசக் கல்வி
கல்வித்துறையில் ஊழலில் திளைத்து அதன் மாண்பே கெட்டுவிட்டது. எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால் கல்வித்துறையில் எங்களால் நிறைய மாற்றங்கள் செய்துகாட்ட முடியும். ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ள முடியும். சமச்சீரான, இலவசமான கல்வியை கொடுக்க முடியும்.

தரமான கல்வி
மென்பொருள் வழி கல்வி சாத்தியம் என்பதை நிரூபிக்க முடியும். சிபிஎஸ்இ தரத்தை விட மேம்பட்ட கல்வியை அரசு சார்பில் கொடுக்க முடியும். இதையெல்லாம் பாமகவால் மட்டுமே செய்துதர முடியும்.

மக்கள் பணி
நாடாளுமன்றத்துக்கு நான் அடிக்கடி செல்வதில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து கேட்கிறீர்கள். அங்கு நான் செல்லவில்லை என்றாலும் மக்கள் பணிகளை செவ்வணே ஆற்றுகிறேன். அதிமுகவில் எத்தனை அணிகள் பிரிந்தாலும் அதில் பாதிப்பு என்னவோ மக்களுக்குத்தான். திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் தமிழக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர போவதாக கூறியிருக்கிறார். ஆனால் மக்களுக்கு திமுக, அதிமுக மீது நம்பிக்கையே இல்லையே என்றார் அவர்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications