அனிதா தற்கொலைக்கு பொறுப்பேற்று விஜயபாஸ்கர் ராஜினாமா செய்யாதது ஏன்? பீட்டர் அல்போன்ஸ்
சென்னை: அனிதா தற்கொலைக்கு பொறுப்பேற்று தமிழக அரசை சேர்ந்த ஒருவருமே ராஜினாமா செய்ய முன்வரவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video

டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், விஜயபாஸ்கர் அளித்த பேட்டியில் இந்த தற்கொலைக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்வதாக ஒரு வார்த்தை கூட கூறவில்லை. முதல்வரும் எதுவும் கூறவில்லை.

அதிமுக மற்றும் பாஜக இந்த விஷயத்தில் ஒரே மாதிரியானவை. உ.பியில் 60க்கும் மேற்பட்ட குழந்தைககள் ஆக்ஸிஜன் இல்லாமல் இறந்த சம்பவத்திற்கு அம்மாநில முதல்வர் பொறுப்பேற்கவில்லை, ஹரியானாவில் உருவாக்கப்பட்ட கலவரத்திற்கு அம்மாநில முதல்வரும் பொறுப்பேற்கவில்லை.
மாநில அரசின் உரிமைகளை காப்பதில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவை பார்த்து இவர்கள் பாடம் கற்க வேண்டும். ஹிந்தியை தேசிய மொழியாக ஏற்க முடியாது, இதற்காக என்னை இந்தியன் இல்லை என கூற முடியாது என தெரிவித்தார் சித்தராமையா. மாநில உரிமைகளை பறக்கவிட்டதன் விளைவுதான் அனிதா தற்கொலை என்றார் பீட்டர் அல்போன்ஸ்.












Click it and Unblock the Notifications