நெல்லை வியாபரியிடம் பண மோசடியா? - டிராபிக் ராமசாமி மீது வழக்கு பதிவு
நெல்லை: நெல்லையில் வியாபாரியிடம் பணம் மோசடி செய்ததாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை தச்சநல்லூரை சேர்ந்தவர் சண்முகம் ஒரு முறுக்கு வியாபாரி. இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு மளிகை கடையில் சோப்பு வாங்கினார். அந்த சோப்பில் பரிசு கூப்பன் இருந்தது.

அந்த கூப்பனை அனுப்பினால் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சண்முகம் அந்த கூப்பனை சென்னையில் உள்ள அந்த சோப்பு நிறுவன முகவரிக்கு அனுப்பினார். அப்போது அந்த நிறுவனம் சண்முகத்துக்கு பரிசு இல்லை என கூறி மறுத்துவிட்டது.
இதையடுத்து சண்முகம் தன்னை தனியார் சோப்பு நிறுவனம் ஏமாற்றிவிட்டதாக கூறி நெல்லை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோர்ட் சண்முகத்துக்கு ரூபாய் 1 லட்சம் மதிப்பிலான பரிசு வழங்கவேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சோப்பு நிறுவனம் சென்னை ஹைகோர்ட்டில் மேல் முறையீடு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த ஹைகோர்ட், நுகர்வோர் கோர்ட்டு உத்தரவை ரத்து செய்தது. இந்தநிலையில் சென்னையை சேர்ந்த டிராபிக் ராமசாமி இலவச சட்ட உதவி மையம் நடத்துவதாக தகவல் அறிந்து சண்முகம் அவரது தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டார்.
போனில் விவரங்களை கேட்ட டிராபிக் ராமசாமி இது தொடர்பாக தனது வழக்கறிஞர் முத்துகிருஷ்ணன் என்பவரை அணுகுமாறு கூறினார். இதைத்தொடர்ந்து சண்முகம் முத்துகிருஷ்ணனை அணுகினார். அப்போது அவர் வழக்கு நடத்துவதற்கு செலவாக ரூபாய் 10 ஆயிரத்தை எங்கள் வங்கி கணக்கில் போட்டு விடுங்கள் என்று கூறினாராம்.
இதையடுத்து சண்முகம் ரூபாய் 10 ஆயிரம் அனுப்பினார். அதன்பிறகு வழக்கு தொடர்பாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் காலம் கடத்தியுள்ளனர். ஏமாற்றம் அடைந்த சண்முகம் இது தொடர்பாக மதுரை ஹைகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதுபற்றி தச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க ஹைகோர்ட் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து தச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி, சப் இன்ஸ்பெக்டர்கள் மகாலட்சுமி, ஷேக் ஆகியோர் விசாரித்து சண்முகத்திடம் மோசடி செய்ததாக பிரிவு 420ன் கீழ் டிராபிக் ராமசாமி, முத்துகிருஷ்ணன் ஆகிய 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications