அப்பல்லோ டாக்டர்கள் நடத்திய பிரஸ் மீட் சட்டப்படி தப்பு.. பி.ஹெச்.பாண்டியன் பொளேர்
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது, அரசால் ஏற்பாடு செய்யப்பட்டு அப்பல்லோ டாக்டர்களை கொண்டு பிரஸ் மீட் செய்திருக்க கூடாது என்று, பி.ஹெச்.பாண்டியன் தெரிவித்தார
சென்னை: ஜெயலலிதா இறப்பிலுள்ள மர்மம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ளபோது, அப்பல்லோ மருத்துவர்களை கொண்டு அரசு பிரஸ் மீட் நடத்தியது சட்டப்படி தவறானது என்று முன்னாள் சபாநாயகரும், அதிமுக நிறுவன கால தலைவர்களில் ஒருவரான பி.ஹெச்.பாண்டியன் தெரிவித்தார்.
நிருபர்களிடம் இன்று பேட்டியளித்த பி.ஹெச்.பாண்டியன், கூறுகையில், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது, அரசால் ஏற்பாடு செய்யப்பட்டு அப்பல்லோ டாக்டர்களை கொண்டு பிரஸ் மீட் செய்திருக்க கூடாது.
பிரஸ் மீட்டிலும் டாக்டர்கள் எந்த ஒரு ஆதாரத்தையும் வெளியிடாமல் சும்மா பேசிவிட்டு சென்றனர். வழக்கு நிலுவையில் இருக்கும்போது யாரை கேட்டு இவர்கள் பிரஸ் மீட் செய்தார்கள்?
இந்த விவகாரங்களில் நான் என்ன செய்யப்போகிறேன் என்பதை காத்திருந்து பாருங்கள். இந்த கேசில் நான் என்ன செய்வேன் என்று இப்போது கூற முடியாது. வழக்கில் நடப்பவற்றை உடனுக்குடன் போலீஸ் வெளியே சொன்னால், குற்றவாளி ஆதாரங்களை திருத்திக்கொள்வான். எனவே பொறுத்திருந்து பாருங்கள். இவ்வாறு பி.ஹெச்.பாண்டியன் தெரிவித்தார்.