கடலூரில் இடைவிடாத கனமழை நீடிப்பு: வெள்ளத்தில் மூழ்கிய கிராமங்கள் - மீட்புக்கு விரைந்தது ராணுவம்!!
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் ஒருவாரகாலமாக இடைவிடாமல் பெய்துவரும் கனமழையால் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கிப் போயுள்ளன. இதனைத் தொடர்ந்து அங்கு மீட்புப் பணியில் ஈடுபடுவதற்காக ராணுவம் விரைந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் 20,000 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர். அவர்களை படகு மூலமாக தீயணைப்பு வீரர்கள், கடலோர காவல்படையினர், போலீசார் மீட்டு அந்தந்த பகுதிகளில் உள்ள முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.

இது தவிர முன்எச்சரிக்கையாக தாழ்வான பகுதி மக்களும் வெளியேறி முகாம்களில் தங்கி உள்ளனர். கடலூர் மாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது. இன்னும் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இதனால் தாழ்வான பகுதி மக்கள் அந்தந்த பகுதியில் உள்ள முகாம்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். நேற்று இரவு விடிய, விடிய கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்தது. கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அத்துடன் என்.எல்.சி.யில் இருந்து திறந்துவிடப்பட்ட மழை வெள்ளமும் கிராமங்களை சூழ்ந்தது. கடலூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 17 செ.மீட்டர் மழை பெய்து உள்ளது
இந்நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது என்றும் வடமாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
இதனைத் தொடர்ந்து வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்திற்கு ராணுவம் அனுப்பட்டு உள்ளது. கடலூர் மாவட்டத்திற்கு 120 பேர் கொண்ட 2 ராணுவ குழுக்கள் விரைந்துள்ளன.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications