விஸ்வரூபம் எடுக்கும் கட்டண உயர்வு- ரயில்வே வருவாய் விர்
தமிழகத்தில் பஸ் கட்டணங்கள் அதிகரித்துள்ளதால் ரயில்வே துறைக்கு வருமானம் அதிகரித்துள்ளது.
நெல்லை: தமிழகத்தில் பஸ் கட்டணங்கள் அதிகரித்துள்ளதால் ரயில்வே துறைக்கு வருமானம் அதிகரித்துள்ளது. மேலும் ரயில்வே துறையும் கூடுதல் ரயில் பெட்டிகளை இணைத்து வருகிறது.
நெல்லை, தூத்துக்குடியில் பஸ் கட்டண உயர்வு காரணமாக மாணவ, மாணவிகள், தொழிலாளிகள், தனியார் நிறுவன ஊழியர்கள் பலர் தற்போது பாசஞ்சர் ரயிலை நாட துவங்கியுள்ளனர். நெல்லை-செங்கோட்டை செல்லும் அனைத்து ரயில்களிலும் கூட்டம் நான்கு நாட்களாக அலைமோதி வருகிறது.

மாலையில் நெல்லையிலிருந்து செங்கோட்டை வரும் ரயில்களிலும் இடம் இல்லாத அளவுக்கு கூட்டம் அலைமோதுவதால் ரயில்வே துறை திணறி வருகிறது. இதையடுத்து மாலை முக்கிய வழித்தடத்தில் இயங்கும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி மதுரை-ராமேஸ்வரம் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் முதல் கட்டமாக இணைக்கப்பட்டன.
அதற்கு அடுத்தப்படியாக செங்கோட்டையிலிருந்து நெல்லை செல்லும் பாசஞ்சர் ரயிலில் கூடுதலாக ஒரு பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. 16 பெட்டிகள் 17 பெட்டிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளன. இதில் இன்னும் ஒரு பெட்டி இணைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
நெல்லை-செங்கோட்டை மார்க்கத்தில் மீதமுள்ள ரயில்களிலும் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் நெல்லை-தென்காசி வழித்தடத்தில் இயங்கும் சாதாரண பஸ்கள் கட்டண உயர்வு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். ரயில்களில் தென்காசியிலிருந்து நெல்லைக்கு செல்ல ரூ.20 தான் என்பதால் கூட்டம் அலைமோதி வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications