மீட்டர் கட்டணத்தை மறுபரிசீலனை செய்யக் கோரி ஆட்டோ டிரைவர்கள் ஸ்டிரைக்...நெல்லையில்!
நெல்லை: ஆட்டோக்களுக்கான மீட்டர் கட்டணத்தை மறுபரீசிலனை செய்ய கோரி நெல்லையில் ஆட்டோக்கள் இன்று இயங்காது என தெரிவிக்கப்பட்டதால், அங்குள்ள மக்கள் திண்டாட்டத்திற்கு ஆளாகினர்.
தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் தொடர்பாக பல்வேறு புகார்கள் சென்றதன் அடிப்படையில் ஆட்டோக்களுக்கான கட்டணத்தை தமிழக அரசு திருத்தி அமைத்தது. கண்டிப்பாக மீட்டர் பொருத்தி அதன் அடிப்படையில் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டது.

இது தொடர்பாக போக்குவரத்து துறை வெளியிட்ட அட்டவணையில், 1.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.25 என்றும், அடுத்து செல்லும் ஓவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.12 என்றும் வசூலித்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆட்டோக்களுக்கு வெயிட்டிங் சார்ஜ் 2 நிமிடத்திற்கு ரூ.3.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரவு நேர பயணம் என்றால் 30 சதவீத கூடுதல் கட்டணம் வசூலித்து கொள்ளலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண விகிதத்தை பல ஆட்டோ டிரைவர்களும் எதிர்த்து வரும் நிலையில் அரசு மீட்டர் பொருத்தும் விவகாரத்தில் உறுதியாக உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் குறைந்த பட்ச கட்டணம் ரூ.40 என நிர்ணயிக்க வேண்டும். கிலோ மீட்டருக்கு ரூ.20 கூடுதல்கட்டணாக வசூல் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும், விலையில்லா மீட்டர் வழங்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாவட்டம் முழுவதும் இன்று ஆட்டோ டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஆட்டோக்கள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை உள்பட பல்வேறு முக்கிய பணிகளுக்கு செல்லும் பொதுமக்கள் இந்த ஆட்டோக்கள் வேலை நிறுத்தத்தால் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications