அஸ்வினிக்கு வீடு புகுந்து கட்டாய தாலி கட்டினாரா அழகேசன்?
கொலையாளி அழகேசன் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மாணவி அஸ்வினிக்கு கட்டாய தாலி கட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது
Recommended Video

சென்னை: கொலையாளி அழகேசன் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மாணவி அஸ்வினிக்கு கட்டாய தாலி கட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது
சென்னை கேகே நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி காம் முதலாமாண்டு படித்து வந்த மாணவி அஸ்வினி இன்று கல்லூரி வாசலில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மாணவி கொலைக்கான காரணம் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காதலை மறுத்த மாணவி
சென்னை மதுரவாயிலைச் சேர்ந்த மாணவி அஸ்வினியை அதே பகுதியைச் சேர்ந்த அழகேசன் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அழகேசனின் காதலை அஸ்வினி மறுத்ததாக கூறப்படுகிறது.

கட்டாய தாலி
இந்நிலையில் மாணவி அஸ்வினிக்கு ஒருமாதம் முன் அழகேசன் கட்டாய தாலி கட்டியதாக கூறப்படுகிறது. வீடு புகுந்து கட்டாய தாலி கட்டிய அழகேசன் மீது அஸ்வினி தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

உறவினர் வீட்டில்
இதனையடுத்து மதுரவாயல் போலீசார் அழகேசனை எச்சரித்துள்ளனர். இந்நிலையில் அழகேசனின் தொல்லையில் இருந்து தப்பிக்க அஸ்வினியை ஜாஃபர்கான் பேட்டையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி படிக்க வைத்துள்ளனர் அவரது பெற்றோர்.

கொலை செய்ய திட்டம்
அழகேசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்ததாக கூறப்படுகிறது. போலீஸில் புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த அழகேசன் அஸ்வினியை கொல்ல திட்டம் தீட்டியுள்ளார்.

கழுத்தை அறுத்து கொலை
அதன்படி இன்று மதிய இடைவேளையின் போது கல்லூரியில் இருந்து வெளியே வந்த அஸ்வினியை காத்திருந்த அழகேசன் ஓட ஓட விரட்டி கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications