நான்தான் எதுக்குமே வந்ததில்லையே.. மு.க.அழகிரி

சமீபத்தில் சென்னையில் நடந்த முக்கியமான திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் மு.க.அழகிரி பங்கேற்காதது சலசலப்பைக் கிளப்பியது. இருப்பினும் இதுகுறித்து மு.க.அழகிரி அப்போது விளக்கம் எதையும் அளிக்கவில்லை. அன்றைய தினம் அவர் மதுரையில்தான் இருந்தார்.
இந்த நிலையில் மதுரையில் நடந்த திமுக பொதுக்குழு தீர்மான விளக்கக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், மு.க.அழகிரியை அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பிக்குப் பின்னர் தயாநிதி மாறனை, வீட்டின் வாசல் வரை வந்து முக மலர்ச்சியுடன் வழியனுப்பி வைத்தார் அழகிரி. இந்த சந்திப்புக்குப் பின்னர் இன்று காலை சென்னைக்குப் புறப்பட்டு வந்தார் அழகிரி.
விமான நிலையத்தில் அவரிடம் செய்தியாளர்கள், திமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு வராதது ஏன் என்று கேட்டனர். அதற்கு அழகிரி, நான் இதுவரை திமுகவின் எந்த பொதுக்குழுவிலும் பங்கேற்றதில்லையே என்று பதிலளித்து விட்டுக் கிளம்பினார் அழகிரி.












Click it and Unblock the Notifications