சென்னையில் ரயில், சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு- பயணிகள் தவிப்பு #bharatbandh
சென்னை: நாடு தழுவிய வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக சென்னையில் இன்று தொழிற்சங்கங்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். கிண்டியில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் கடற்கரை - தாம்பரம் இடையேயான புறநகர் ரயில்வே சேவை பாதிக்கப்பட்டது.
தொழிலாளர்களுக்கு அடிப்படை மாத ஊதியத்தை ரூ.18 ஆயிரமாக நிர்ணயிக்க வேண்டும், குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 10 தொழிற்சங்கங்கள், பொதுத்துறை வங்கிகள் சார்பில் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் மத்திய தொழிற்சங்கங்களைச் சேர்ந்த சுமார் 18 கோடி ஊழியர்களும், 6 லட்சம் வங்கி ஊழியர்களும் பங்கேற்றுள்ளனர்.

தமிழகத்தில் அண்ணா தொழிற்சங்கத்தை தவிர மற்ற தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. சென்னை, திருச்சி, மதுரை, கோவை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மத்திய, மாநில தொழிற்சங்கத்தினர் பல்வேறு கட்ட போராட்டங்க்ளை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டத்தில் பீடித் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். ஆங்காங்கே ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள பல்லவன் இல்லம் முன்பு தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் போலீசார் தர தரவென இழுத்துச் சென்று கைது செய்தனர்.
சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் தொழிற்சங்கத்தினர் திரளாக வந்து ரயிலை மறித்து போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அனைத்து தண்டவாளங்களிலும் ஏராளமானோர் அமர்ந்து மறியல் செய்ததால் எந்த ரயிலையும் இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.

தொழிற்சங்கத்தினர் அந்த இடத்தைவிட்டு வெளியேறாததால், அவர்களிடம் காவல்துறை உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை தண்டவாளத்தை விட்டு அகற்றினர். தண்டவாளத்தை விட்டு வெளியேற மறுத்தவர்கள் கைது செய்யப்பட்டனர். அதன்பிறகே ரயில்கள் புறப்பட்டுச் சென்றன. இதன் காரணமாக தாம்பரம் - கடற்கரை இடையே சுமார் அரை மணிநேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பொதுமக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாகவும், பஸ்கள்- ரயில்களை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். வேலை நிறுத்தம் காரணமாக ஏற்படும் அசம்பாவிதங்களை தடுக்க தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications