மதுரை எஸ்.பி.ஐ வங்கிகளுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் - வீடியோ
மதுரையில் உள்ள எஸ்.பி.ஐ வங்கிகளுக்கு வெடுகுண்டு மிரட்டல் விடப்பட்டது. அதையடுத்து போலீஸ் அங்கு சோதனை நடத்தியதில் வெடிகுண்டுகள் இல்லை என உறுதி செய்யப்பட்டது.
மதுரை: மதுரையில் உள்ள எஸ்.பி.ஐ வங்கிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதால் அனைத்து எஸ்.பி.ஐ வங்கிகளிலும் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. இதனால் வங்கிகளில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியியின் தலைமை அலுவலகத்துக்கு, மதுரையில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி ஒன்றில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடப்பட்டது.

இதனால் பதறிப்போன அதிகாரிகள், காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் மதுரையில் உள்ள அனைத்து எஸ்.பி.ஐ வங்கிகளிலும் வெடிகுண்டு நிபுணர்களைக் கொண்டு சோதனை நடத்தினர். மோப்பநாய்களைக் கொண்டும் சோதனை நடத்தப்பட்டது.
ஆனால், மதுரையில் உள்ள எந்த எஸ்.பி.ஐ வங்கிக் கிளைகளிலும் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மிரட்டலை யார் விடுத்தது என்பதும் தெரியவில்லை.இதனால் மதுரையில் உள்ள அனைத்து எஸ்.பி.ஐ வங்கிகளில் பதற்றமும் பரபரப்பும் காணப்பட்டது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications