வெளிநாட்டிலேயே இருக்கும் பிரதமர் மோடியை முதலில் இந்தியாவுக்கு கூட்டி வாங்கப்பா: குஷ்பு
புதுச்சேரி: வெளிநாடுகளிலேயே இருக்கும் பிரதமர் மோடியை முதலில் இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் உள்ள முருங்கப்பாக்கத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,

ரங்கசாமி
காங்கிரஸ் கட்சியால் அடையாளம் காட்டப்பட்டவர் தான் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி. காங்கிரஸ் மட்டும் அவரை அடையாளம் காட்டாமல் இருந்திருந்தால் அவர் வெறும் சாமியாகத் தான் இருந்திருப்பார். அத்தகைய கட்சிக்கே அவர் துரோகம் செய்துவிட்டார்.

என்.ஆர். காங்கிரஸ்
ரங்கசாமி தனது கட்சிக்கு தன் பெயரை சூட்டியுள்ளார். அவர் என்ன காந்தியுடன் சேர்ந்து தண்டி யாத்திரை சென்றாரா? அவர் என்ன சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டாரா?. காந்தி பெயரில் கூட கட்சி இல்லாதபோது இவர் எப்படி தனது பெயரை கட்சிக்கு சூட்டலாம்.

வாக்குறுதி
ரங்கசாமி தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. அவர் ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறார். புதுச்சேரி மக்கள் இனியும் அவரையே நம்பி இருக்காமல் 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸை ஆட்சிக்கு கொண்டு வருவார்கள்.

காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சி கஷ்டத்தில் இருந்தபோது நான் அதில் சேர்ந்ததாக கூறுகிறார்கள். காங்கிரஸ் கட்சி எப்பொழுதும் கஷ்டத்தில் இருந்தது இல்லை. அந்த கட்சிக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறார்கள்.

மோடி
நாங்கள் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் கருப்பு பணத்தை மீட்போம் என்று பாஜக கூறியது. ஆனால் பாஜகவினர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. வெளிநாட்டிலேயே இருக்கும் பிரதமர் மோடியை முதலில் இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்றார் குஷ்பு.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications