சென்னை கட்டட விபத்து- தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சென்னையில் நடந்த 11 அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்து விழுந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம், தமிழக அரசுக்கு நோட்டீஸ அனுப்பியுள்ளது.

பத்திரிகைச் செய்திகளின் அடிப்படையில் தானாக முன்வந்து இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளது ஆணையம். இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள ஆணையம், 2 வாரங்களுக்குள் இதற்குப் பதிலளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

Building collapse: NHRC notice to Tamil Nadu

இதுகுறித்து ஆணையத்தின் நோட்டீஸில் கூறுகையில், இந்த விபத்து, கட்டுமானத் தவறுகள், குறைபாடுகள், பில்டரின் விதிமீறல் ஆகியவற்றின் காரணமாக நடந்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதையே பத்திரிகைச் செய்திகளும் தெரிவிக்கின்றன. அவை உண்மையாக இருக்கும்பட்சத்தில் அது மிகப் பெரிய மனித உரிமை மீறலாகும். பல உயிர்கள் இதில் பலியாகியுள்ளன. பலர் காயமடைந்துள்ளனர். இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+